கவிதை துளிகள்

எழுதி முடித்த கவிதைகளின்
முதல் இரசிகனாய்
என் பேனா

கசங்கியிருந்த காகிதம்
பட்டமாகியது
கவிதை நூல் வெளியீட்டு விழாவில்

காணாமல் போன குழந்தை
கிடைத்து விடுகிறது
சுவரொட்டிகளில்