நான் உலகத்தைப்பற்றி பேசுவதும்
உலகம் என்னைப்பற்றி விமர்சிப்பதும்
ஆளுமை செலுத்தும் மனசாட்சியின்
அழுத்தமும், ஆரோக்கியமும்,
அழுக்குப் பொதிகளை அகற்றம்படி
மனசாட்சி ஆணையிடும்போது
அடங்கிப் போவது
மனித தர்மத்தின் உச்சமே!
பகுத்தறிவுவாத பெருமைக்கும்
பலமுள்ள சமூக சிந்தனைக்கும்
முகவரிதரும் மனசாட்சியின் குரல்
தனிமனிதனை, தனித்துவ பெருமையிலே
தரணி முன் நிறுத்துகிறது உத்தமனாக!
மனசாட்சியை இழப்பதும்
இல்லாமல் செய்வதும்
மானிலத்தை அவமதிப்பதாகும்…
மனித புலத்திற்குள், வனவிலங்குகள்
வாசம் செய்வதாக!
மனசாட்சியைக் கொன்று
வாழ்தலென்பது,
காலமுனை சிரச்சேதம் செய்யும்
தருணமாகிவிடும்!
மனிதனுக்கும், மனசாட்சிக்கும்
இடைவெளியிருப்பின்
செங்கோல்கள் செயலிழந்துவிடும்..
பங்கப்படும் மூச்சுக்களில்
‘பங்கசு’க் கிருமிகள் பெருகும்!!!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.