மனதில் பெரிதாக ஒரு கீறல்!
மனத்திரை விலகிய நிலையில்
மருண்டு போய் நின்ற கணத்தில்
மாற்றம் வந்து வலியை தந்து விட்டது!
நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில்
நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது;
நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக
நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது
ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு
ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில்
ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல்
ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில்
வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே …
வேஷம் போடும் மனித வாழ்க்கையா இது …
வேற்று கிரகம் ஒன்றை தேடிச் சென்றாவது
வேண்டிய வாழ்க்கை வாழ வரம் வேண்டுமே!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...