pukalidam_thaசித்திரைத் திங்கள் வெயிலெனவே – என்
சிந்தையைக் கலக்கிடச் செய்தவளே
நித்திரை உலகுக்கு அனுப்பாதே – என்
நிம்மதிக் கெடுத்து வாட்டாதே!

பத்தரை மாற்றுத் தங்கமெனப் – பல
பண்புகள் கொண்டு ஒளிர்ந்தவளே!
இத்தரை மீதினில் நான்வாட நீ
என்னை விட்டுச் சென்றதெங்கே?

உலவும் தென்றல் குளிரெனவே – என்
உள்ளச் சோலையில் பூத்தவளே!
இலவு காத்த கிளிபோல எனை
ஏங்க வைத்தே சென்ற தெங்கே?

பிரிவென் கின்ற புயற்கரத்தால் – உயர்
பாசச் சுடரை அணைத்துவிட்டுச்
சருகாய் என்றன் வாழ்வதனைத் – தரையில்
சரியச் செய்தே சென்றதெங்கே?

இதய மேடையின் இனியவளே – எனை
இணைத்து வாழ்ந்திட நினைத்தவளே!
உதய மலராய் சிரித்தவளே – நீ
ஓடி மறைந்தே சென்றதெங்கே?

சாதியின் கொடுமை தாளாமல் – துயர்
தணலில் நெஞ்சம் கொதித்திடவே
பாதியில் பிரிந்து வாடுகிறேன் – இந்தப்
பாவிக்குப் புகலிடம் தாராயோ?


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.