கவிதை

பாசக்கடல்

துன்பக் கடலினிலே - நான் துயர்படும் வேளையிலே! இன்பமென வருவாள் - என் எண்ணத்திலே நிறைவாள்! பாலில் சுவைசேர்த்தே - என்னைப் பாரடா கண்ணாவென்பாள்! நூலில் இழைபோல - அவள் நுண்ணிய அறிவுடையாள்!