பாசக்கடல்

துன்பக் கடலினிலே – நான்
துயர்படும் வேளையிலே!
இன்பமென வருவாள் – என்
எண்ணத்திலே நிறைவாள்!

பாலில் சுவைசேர்த்தே – என்னைப்
பாரடா கண்ணாவென்பாள்!
நூலில் இழைபோல – அவள்
நுண்ணிய அறிவுடையாள்!