மரபுக் கவிதை

வான் நிலவும் வண்ண நினை(ல)வும்

பால்வெளியில் பந்தெறிந்த தேவதையிங்கு யாரோ?
பால்நிலவாய் வலம்வருமே வண்ணநிலா தானோ?
வைரவெளிப் பொட்டலிலே வந்திடுவாள் அவளே
வான்நிலவு மங்கையவள் வசங்கொள்வாள் நமையே!

காதோடு வருடுமந்த காற்றோசை போலக்
கதைபலவும் சொல்லிடுவார் நினைவோசை மேலே,

 » Read more about: வான் நிலவும் வண்ண நினை(ல)வும்  »

மரபுக் கவிதை

ஆசையக் காத்துல தூது விட்டேன்

கிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட
          மெல்ல மயக்குமென் மேவும்நிலை சொல்லுதற்குத்
துள்ளும் கயல்சரியோ?  துடிப்பான மான்சரியோ?
         

 » Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன்  »

மரபுக் கவிதை

வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!

செந்தமிழின் பேரெழிலைத் தீட்டிடுவார்! நற்கவியால்
முந்தைத் தமிழ்மரபை மூட்டிடுவார்! – சிந்தையெலாம்
விந்தை புரிந்திடுவார்! மேன்மையுறும் பாட்டரசர்
சந்தம் இனிக்கும் தழைத்து!

கம்பன் கவிகாக்கும் காவலர்! போற்றியே
நம்மின் தமிழ்காக்கும் நாவலர்!

 » Read more about: வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்!  »

இலக்கணம்-இலக்கியம்

தமிழமின் வாழ்க தழைத்து!

விசித்திர அகவல்

ஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.

குறள் வெண்பா

குமுத மலராகக் கோலவிதழ் பின்னும்
தமிழமின் வாழ்க தழைத்து!

 » Read more about: தமிழமின் வாழ்க தழைத்து!  »

மரபுக் கவிதை

தமிழ்க்கூட்டம் போதுமே…

தமிழால்நாம் கூடலா மென்றேன் !
சாதியால் நீ கூடிப்போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்மதமே தேடிப் போனாய் !
தமிழால்நாம் கூடலா மென்றேன் !
தன்னூரார் நாடிப் போனாய் !

 » Read more about: தமிழ்க்கூட்டம் போதுமே…  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

மரபுக் கவிதை

அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.

முற்றிலும் சிற்பங்களோடு
முறுவலுடன் ஆடும் உறிமாலை,
பொன்னகை பூட்டி அலங்காரம்
புன்னகை சிந்தும் உற்சவரும்,
மின்னிடும் விளக்குகள் சொலிக்க
வண்ணக் கோலங்கள் நிறைந்த ரதவீதி,
சுற்றிடும் உயர்ந்ததோர் தேரே
நீர் சுற்றிடும் சூட்சுமம் அறிவீரா?

 » Read more about: அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது.  »

மரபுக் கவிதை

ஆடிடு பெண்ணே

வானவில்லை வரிந்து உடுத்தி,
வண்ண மயில்கள் ஆடுது;
வாலிபத்துச் சோலையிலே,
வந்து நின்று ஆடுது;
வளைக்கரங்கள் கோர்த்திங்கு,
வட்டம் சுற்றி ஆடுது;
கிறுகிறுத்துப் போகும் தலை,

 » Read more about: ஆடிடு பெண்ணே  »

கவிதை

வேரில் பழுத்த பலா!!!

வேர்தனிலே பழுத்திடுமா வேகமாகச் சுவைதருமா?
பார்மீதில் தந்திடுமே பலாச்சுளையும் பக்குவத்தால்
கார்கால கன்னிபோல  கனத்திருந்தால் பழமாகி
சீர்போன்றே அழகான சிலையாகி நின்றிடுமே!!!

மலர்களெல்லாம் மலர்ந்திடுமே மணந்தருமே நாள்தோறும்.

 » Read more about: வேரில் பழுத்த பலா!!!  »

மரபுக் கவிதை

கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு 
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!

ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !

 » Read more about: கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!  »