பெண்ணான வெள்ளிப்பூ

சீற்றமிகு கண்ணகியும் பொறுமையாய் இருந்தவளே தூற்றுகின்ற செய்கைகண்டு துர்க்கையாய் மாறினாளே.. ஆற்றல் மிகு மொழி கூட்டி போற்றும் வழி மலர்ந்தாளே மாற்றம் ஒன்று வேண்டுமென மதுரைக்குள் நுழைந்தாளே.. காத்திருந்த கணவனையே காவெடுத்த மன்னனுக்கு பூத்திருந்த காற்சிலம்பால் ஆத்திரத்தைத் தந்தாளே மன்னவனே யானாலும் தன்கடமை பிழையாக தன்னுயிரைத் தந்தானே இதுவன்றோ தமிழென்று இயம்பிடவே வந்த வெள்ளி மானுடத்தின் அகராதியை மக்களுக்குத் தந்திடவே வேர்கொண்ட விடியலாகி விவரப் பொழுதாகி ஊர்அணைய உறுதிதனை உளமாறச் Read more

பேரொளி பிறந்தது!

பேரொளி பிறந்தது காரிருள் மறைந்தது! பாரெலாம் தீன் ஒளி பரவிப் பளிச்சிடப் பூரணமாகி யோர் புத்தொளி பிறந்தது! காரணர் முஹம்மத் எனுமொரு குழந்தை ஆமினா வயிற்றில் அழகாய்ப் பிறந்தது! பாரினில் இந்தப் பிறப்பிலை யென்றால்… யாருமே இல்லை! சூரியன், சந்திரன் வானம் பூமி… எதுவுமே இல்லை எவருமே இல்லை! பாரினில் ஒரு பகலவ னாக.., பாலையில் ஒரு நீர்ச் சுனையாக.. அகிலத் திற்கெலாம் அருட் கொடையாக.. வல்ல நாயனின் தூதுவ  Read more

அழகிய மணாளன்..

மழைக்கால ஓரிரவில்.. உதிர்த்துக் கொண்டிருந்தது வெண்ணிறப் பூக்களை மேகம்.. உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன் பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்.. காரணம் தேடும் மனம் ஊர் சுற்ற.. தவமாய் தவமிருந்து விழிகளை சந்திக்க.. ஏனோ அவன் எனைத் தொடர.. ஆள் அரவமற்ற தெருவில்.. பூமழை மனதிலும் திடீரென.. உள்ளே தள்ள வெளிவரும் இதயத்தை.. நிற்காமல் நின்றேன் ஓரிடத்தில் பதின்ம வயதின் பருவத் துடிப்போ.. இது தான் முதல் காதலா..?! தோற்றேன் Read more

கன்னியின் கண்ணீர்

காலம் கனியுமா கனவுகள் பலிக்குமா கவலைகள் கலையுமா கன்னி மனம் மகிழுமா!! தண்ணீரில் மீன் அழுதால் தெரியுமா கண்ணீரில் போடும் கோலம் நிலைக்குமா!! ஊமைக்குயில் பாடும் ராகம் புரியுமா ஏழை எனக்கொரு வாழ வழி பிறக்குமா!! மனம் மதிக்கும் மனமொன்று கிடைக்குமா மணமாலையொன்று வந்து கழுத்தில் விழுமா!! என் இளமை வீணாகியே போகுமா வயதாகி வாழாது வாழ்வு பாழா போகுமா!!

கவிதை: விரதம்

தெலுங்கில் எழுதியவர்: உஷா துரகா காருக்குக் குறுக்கே வந்தவனை வாய் வலிக்கத் திட்டிய அரைமணிக்கு அன்று மௌன விரதம் இருப்பது நினைவு வந்தது இரண்டாவது குலாப்ஜாமூன் தொண்டைக்குள் இறங்கும்போது அன்று உபவாச தீட்சை இருப்பது நினைவு வந்தது ஹாய்…குட் மார்னிங்.. மலர்ந்து சிரித்து சக உத்யோகியை கை குலுக்கிய மறு நிமிடம் அவள் மீது கோபத்தில் நேற்று முதல் பேசாமல் இருப்பது நினைவு வந்தது நான் நோற்கும் விரதமெல்லாம் ஒரு Read more

உனக்கு ஏது உறக்கம்.?

தோன்றிய கால முதல் தூண்டாய் மணி விளக்காய் தோன்றிய. தமிழ்த் தாயின் தலைமகனே. குமணன் தலை கொடுக்க முன்வந்தான் நீயோ தன்னையே தமிழுக்கு தந்தாய் புறநானூறு அகநானூறு ஆக மொத்தம் எண்ணூறு என எண்ணிக் கொண்டிருந்தவர்கள் மத்தியில் சங்கத் தமிழின் சங்கதிகளை சரித்திரமாய் சொன்னவன் நீயே மனிதகுலத்தின் போக்கு வரத்திற்கு கோடு கிழித்த வள்ளுவனுக்கு வான் புகழ் கொண்ட சிலை அமைத்தவன் நீயே உரை வீச்சில் உள்ளத்தை உருக வைத்தவனே Read more

பரிதி

தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே! தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே! தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே! செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே! எங்கள் சேது சமுத்திரமே! சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம் சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே! சீர் மரபினனாம் தமிழனின் சிந்தைக்கு சோறூட்டும் அகல்விளக்கே! அறிவுக்கடலே! ஆரமுதே! பெண் விடுதலைக்காய் குரல் கொடுத்த நளாயினியே! திகட்டாத தமிழால் வீரமுதூட்டிய தென்பாண்டிச் சிங்கமே! வற்றாத காவிரியாய் வளைய வரும் ராஜ Read more

நீதான் எந்தன் நிழல்

மௌனப் புன்னகை கொட்டிய உந்தன் வதனத்திலிருந்து ததும்பி ஓடும் அன்பின் வாசனையை அள்ளிக் குடிக்கிறேன்… அது நீண்ட சஞ்சரிப்போடு எந்தன் கரங்களில் நசிபட்டு என்னைத் தாண்டி நெடுதூரம் ஓடியது ஆனந்தச் சாயல்கள்… விரித்துப் பார்க்கையில் கொம்புகள் தள்ளி மடிந்து போன கனவுகளைச் சேர்த்து புதுப்பாடம் புகட்டியது நீதான் எந்தன் நிழற் படமென.!!!

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை

தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை என் தேசத்தில் தேடுகின்றேன் வறுமையற்ற வாழ்வாய் எனக்கான சந்ததிகளில் விழிகள் நிறைய கண்ணீரோடு கையேந்தும் சிறுவர்களின் கெஞ்சலும் தோல்சுருங்கி கைவிடப்பட்ட மூதாட்டியின் முனகலோடும் நடுங்கும் கைகளில் கைத்தடியின் ஆதரவில் கால்இடறி ஆதரவின்றி விழப்போகும் முதியவரிடமும் தேடுகிறேன் வறுமையற்ற வாழ்வை. ஒரே துணியை பலமுறை உடுத்தி சக மாணவரின் கேலிக்கு உரித்தாகி முகம் சுண்டி வீடு திரும்பும் மாணவனிடமும் கல்வியின் ஏக்கங்களில் வீடு வீடாய் பாத்திரக் கரியினை Read more

யாரைத்தான் நம்புவதோ…

உண்மைகளுக்குள் உண்மைகளைத் தோடும் உலகம் ஊமையாகிப் போன நேர்மைகள் தோற்றம் அளிக்கின்றன துரோகங்களாக! பொய்களுக்கு அளிக்கப்படும் அலங்கார்த்தில் தான் எத்தனையே அற்புதங்கள் மெய்கள் இங்கே முதிர்க்கன்னிகளாக வாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள் வாசிப்பதற்கு மாத்திரமே உள்ளங்களில் ஊன்றப்படும் உவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே! வாழ்வில் சூன்யம் வைத்த மனிதன் வாழ்க்கையில் மாயம் கண்டான் ஆறுபது வரை ஆயுளில் தினம் தோறும் புது புதுப் வேடங்கள் பூண்டான் வேதங்களை மறந்து வேதாந்தம் Read more