மழைக்கால ஓரிரவில்..
உதிர்த்துக் கொண்டிருந்தது
வெண்ணிறப் பூக்களை மேகம்..

உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன்
பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..
காரணம் தேடும் மனம்
ஊர் சுற்ற.. தவமாய் தவமிருந்து
விழிகளை சந்திக்க..

ஏனோ அவன் எனைத் தொடர..
ஆள் அரவமற்ற தெருவில்..
பூமழை மனதிலும் திடீரென..

உள்ளே தள்ள வெளிவரும் இதயத்தை..
நிற்காமல் நின்றேன் ஓரிடத்தில்
பதின்ம வயதின் பருவத் துடிப்போ..
இது தான் முதல் காதலா..?!

தோற்றேன் ஒத்திகை பார்த்து..
நடுங்கியது உடல் சாரலில் நனைந்து..
நுரையீரல் சற்றே வீங்கியது..

அழைப்புக்குரல் “என்னங்க”
நிராயுதபாணியான நொடியில்
நிமிர்ந்தேன் தரிசிக்க
விரும்பிய கமலக்கண்ணனை..
மஞ்சள் நிற தெருவிளக்கினடியில்
அழகிய மணாளன்..

சருகானேன் காதலில்லை
அந்தக் கண்களில்.. இடி தாக்கியது..
அவன் திருவாய் மலர்ந்ததில்..
“உங்கள் தோழியின் பெயரென்ன..?!”


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்