புதுக் கவிதை

இதழ்சிவப்பு

கண்டாங்கி சேலைகட்டி வாருங்கடி – வாருங்கடி
கவிராஜன் பேத்திபுகழ் பாடுங்கடி.
செண்டாடும் குழலழகி கணவரவர் – கணவரவர்
ஸ்ரீராமன் புகழைச்சொல்லி வாழ்த்துங்கடி.

மூவேந்தர் பரம்பரைகள் ஆண்டநிலம் –

 » Read more about: இதழ்சிவப்பு  »

புதுக் கவிதை

தாயன்பு!

வேதனை வலிகளுடன்
போறாடி எனை ஈன்றெடுத்தாய்!
பாலோடு தேன்கலந்தே
திகட்டாமல் ஊட்டுவித்தாய்!
தேரோடும் வீதியிலே
சலிக்காமல் நடக்க வத்தாய்!
பாரெல்லாம் போற்றிடவே
பண்பாளனாய் நீ வளர்த்தாய்!

 » Read more about: தாயன்பு!  »

புதுக் கவிதை

தீபாவ(ளி)லி

கொளுத்திப் போட்ட பட்டாசுகளில்
மருந்துகளைத் திரட்டிக் கொண்டிருந்தான்.
இதை வைத்தே வெடிகளைத் தயாரித்து விடுவான்.
ஒவ்வொன்று வெடிக்கும்,
ஒவ்வொன்று புஸ்ஸ்ஸ் விடும்.
அடுத்த வீட்டு அண்ணன் கொடுத்த
பழைய உடைதான்,

 » Read more about: தீபாவ(ளி)லி  »

புதுக் கவிதை

வாய்க்கும் நல்லதீபாவளி

ஒளியூட்டும் இனியவிழா தீபாவளி இருளகற்றி
மருளகற்றி மனம்மகிழ தீபாவளி வருமெமக்கு
நிறைவான மனதுவர தீபாவளி உதவிடட்டும்
நலம்விளைக்க மனமெண்ணி வரவேற்போம் தீபாவளி! புலனெல்லாம் தூய்மைபெற புத்துணர்வு பொங்கிவர அலைபாயும் எண்ணமெலாம் நிலையாக நின்றுவிட மகிழ்ச்சியது மனமெங்கும்
மத்தாப்பாய் மலர்ந்துவிட வாசல்நின்று பார்க்கின்றோம் வந்திடுவாய் தீபாவளி!  » Read more about: வாய்க்கும் நல்லதீபாவளி  »

புதுக் கவிதை

அவர்கள்

அவர்கள்
தங்களை நல்லவர்கள் போல்
தெரியப்படுத்திக்
கொள்கிறார்கள்??

அவர்களின்
உடல்மொழி
ஒவ்வொரு மனிதர்களிடத்திலும்
இலகுவாக
பொருந்திக்கொள்கிறது?

வெளிச்சத்தை
உமிழ்ந்து
விட்டில்களை உண்ணும்
விளக்குகளைப்போல
அவர்களின் பேச்சு
வன்மத்தை கக்குகிறது??

 » Read more about: அவர்கள்  »

புதுக் கவிதை

கண்ணாடி

கண்ணாடி Mirror

மூலம்: சில்வியா பிளாத்
மொழியாக்கம்: தாரா கணேசன்

நான் வெள்ளியின் துல்லியமானவள்
எவ்வித முன்புனைவுகளும் அற்றவள்
காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள்
காதலின் மூடுபனியோ அன்றி
வெறுப்போ இன்றி
கொடூரம் அற்றவளாய்,

 » Read more about: கண்ணாடி  »

புதுக் கவிதை

ஆழி சூழ் தமிழ்

இலெமூரியாவில் பிறந்தவன்
ஆழியில் உலகம் அளந்தவன்

நாற்பத்தொன்பது நாடுகளாம் குமரிக்கண்டத்தில்…..

நாதியற்று நிற்கிறான் உலகக்கண்டங்களில்..!

மயிலுக்கும்
முல்லைக்கும் …..
அள்ளிக்கொடுத்த கடை ஏழு வள்ளல்கள்
வாழ வழியின்றி காத்துக்கிடக்கிறான்
அயல்நாட்டில்
அகதியின் வாரிசுகள்…..!

 » Read more about: ஆழி சூழ் தமிழ்  »

கவிதை

யாருக்கும் வாய்ப்பதில்லை !

காரிருக்கு வீடிருக்கு கையினிலும் பணமிருக்கு
பலபேரின் நட்பிருக்கு பரிசுகளும் குவிந்திருக்கு
என்றாலும், மனத்தளவில் என்னவோ குறையிருக்கு
எதுவென்று தெரியாமல் ஏக்கமே நிறைந்திருக்கு!

முதுமைவரும் காரணமா முறுவல்வர மறுப்பதுவா
தனிமைவரும் எனும்நினைப்பு தலைதூக்கி வருவதுவா
ஓடியோடி உழைத்துவாங்கி உள்வீட்டில் சேர்த்ததெலாம்
யாரினிமேல் பார்த்திடுவார் எனுமெண்ணம் எழுவதுவா!

 » Read more about: யாருக்கும் வாய்ப்பதில்லை !  »

கவிதை

உனக்கான கரை

உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.

எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.

 » Read more about: உனக்கான கரை  »

கவிதை

தொடமுடியா சரித்திரமே…

அகரத்திற்கோர் பெருமை
நின் பெயரின் முதலெழுத்தை
முதல் எழுத்தாய்க் கொண்டதால்!

ஆக்கத்தின் திறவுகோல்
நின்னணுக் கரங்களிலும்
மழலைப் புன்னகையிலும்!

இந்திய தேசம் கண்டெடுத்த
விஞ்ஞானப் புதையல் நீங்கள்!

 » Read more about: தொடமுடியா சரித்திரமே…  »