மரபுக் கவிதை

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

தாலாட்டிப் பாலூட்டிப்
பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
ஆளாகி நீஉயர
அறிவுருத்த மறப்பதில்லை!

உயிரிருந்தால் போதுமென்ற
உணர்வுடனே இருப்பதில்லை!

 » Read more about: தந்தைக்கு ஒரு தாலாட்டு!  »

அஞ்சலி

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை
        இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று
திசைமாறிப் போகாமல் திறமை யோடு
        தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்
விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி
 

 » Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா  »

மரபுக் கவிதை

எத்திசையும் முழங்கிடுவோம்

பையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்
நாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று
பையப்பைய நடக்கும் அகழ்வாராய்ச்சியில்
பகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.

குறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்
குரலோசை மொழிபெயர்ப்பில் உலகெங்கும்.

 » Read more about: எத்திசையும் முழங்கிடுவோம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »

புதுக் கவிதை

யாரைத்தான் நம்புவதோ…

உண்மைகளுக்குள்
உண்மைகளைத் தோடும் உலகம்
ஊமையாகிப் போன நேர்மைகள்
தோற்றம் அளிக்கின்றன துரோகங்களாக!

பொய்களுக்கு அளிக்கப்படும்
அலங்கார்த்தில் தான்
எத்தனையே அற்புதங்கள்
மெய்கள் இங்கே முதிர்க்கன்னிகளாக

வாய்மை வெல்லும் என்ற வார்த்தைகள்
வாசிப்பதற்கு மாத்திரமே
உள்ளங்களில் ஊன்றப்படும்
உவமைகள் யாவுமே கலப்பு கலந்ததே!

 » Read more about: யாரைத்தான் நம்புவதோ…  »

புதுக் கவிதை

காம, மதவெறி பிடித்த கயவன்களே!

காம, மதவெறி பிடித்த
கயவன்களே!

எதை நீ
தேடினாய் -அந்த
எட்டு அகவை
அசிஃபாவிடம்

நீ தூங்க
அவள் தூங்காமல்
இரவு முழுவதும்
உன்னை சாய்த்து
வைத்திருந்த
அந்தத் தோள்களையா?

 » Read more about: காம, மதவெறி பிடித்த கயவன்களே!  »

மரபுக் கவிதை

மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்

மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்
இன்னும் என்னடா இமைக்குள் உறக்கம்?

எழுந்து வாடா எரிதழல் போல
பழுதை எல்லாம் பட்டென எரித்திடு!

ஆண்ட இனமே அடிமை வாழ்வா?

 » Read more about: மண்ணும் மொழியினம் மாற்றான் கையில்  »

புதுக் கவிதை

மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்

விளக்கொளியில் மறைந்திருக்கும்
மையிருட்டில் பொலிவிழந்த முகங்களின்
அடையாளங்கள் நிலைத்திருக்கும்!
தெளிவற்ற சிந்தனைக்குள்
செயல்பாட்டின் விரல்கள் எல்லாம்
முடங்கியிருக்கும்!
ஒன்று கூடிப் பேசினாலும்
முடிவற்ற சூழலுக்குள்
பொய்மையும் புறங்கூறலும்
மண்டிக்கிடக்கும்!

 » Read more about: மண்சார்ந்த கலாச்சாரம் தொலைத்துவிட்ட வாழ்வுதனில்  »

புதுக் கவிதை

யாராவது தூண்டிலோடு வருவார்களா?

ஒரு ஜன்னலின்
கதவொன்றில் தெரிகிறது
அவளின் நிழலாடும்
உருவம்…

இரவுநேர வெப்பச் சலனத்தில்
கிணற்று நீரில்
எத்தனை முறை குளிப்பது
சலித்துக்கொள்ள முடியாத
உடல்சூட்டில் தணியாத
பெண்மையின் படைப்பு

பகலில் கூட தூங்கமுடியாது
இனம்புரியாத கனவுகளை
ஏற்க மறுத்தாலும்
பருவத்தின் பிடிக்குள்
சிக்கித் தவிக்கவே செய்கிறது
மனத்தின் கெண்டைகள்

மீண்டும் ஜன்னலின்
கதவிடுக்கில் பார்த்துக் கொண்டே
விம்முகிறாள்…

 » Read more about: யாராவது தூண்டிலோடு வருவார்களா?  »

மரபுக் கவிதை

இயற்கை அழகு!

முத்துக்களைக் கோர்த்துவந்து
முறுவலிக்கும் பற்களென்றாய்,
கெழுத்திமீனை எடுத்துவந்து
கண்களெனக் காட்டுகின்றாய்.

முந்திரிப்பழம் கொண்டுவந்து
மூக்கென்றே வாசிக்கிறாய்,
கோவைப்பழம் எடுத்துவந்து
கூறுகிறாய் இதழென்று.

கருமுகிலைத் தாங்கிவந்து
கருங்கூந்தல் தானென்றாய்,

 » Read more about: இயற்கை அழகு!  »