மரபுக் கவிதை
தமிழில் உறைந்து போதல்
பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி
பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில்
மொத்தமாய் ஆவி உடல்
மோகனமாய்த் தந்த பின்னே
படித்தேன் – கவி – வடித்தேன்
நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல்
நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை
பெற்றணையா தீபமென
பேரொளியைச் சிந்துகின்ற
நூலைப் – படி – காலை
திருக்குறளின் ஞானப்பால் குடித்தேன் – ஒரு
தினந் தவறா அதிகாரம் முடித்தேன் – முகில்
கருக்காக ஆன மனம்
கதிரவனாய் ஆகித்தினங்
கோர்க்கும் – ஒளி –