சிறுகதை

இணைந்த வாழ்க்கை

நல்ல கட்டுமஸ்தான உடல், அதற்கேற்ற உடை. கையில் ஒற்றை மலருடன் உதட்டில் மலர்ந்த புன்னகையுடன் கடற்கரையின் மணற்பரப்பில் உட்கார்ந்திருந்தான் அருண்..

பார்வை கடல் அலையில் விளையாடிடும் சிறுவர்கள் மீதும், அவர்கள் விரட்டிடும் நண்டின் மீதும்..

 » Read more about: இணைந்த வாழ்க்கை  »

புதுக் கவிதை

உயிர் ஊசலில் விளைநிலம்

விதைத்த விதைகளை உள்வாங்க
என் உடலில் உயிர்சத்து இல்லை.

விதைகளை முளைக்கச்சொல்ல
என்மனதில் ஈரமில்லை.

வெற்றிடங்களை நிரப்ப
வருணபகவானுக்கோ மனமில்லை.

கண்விழித்துப்பார்த்தால்
வெள்ளைமாளிகைகள் நாற்காலி
போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது.

 » Read more about: உயிர் ஊசலில் விளைநிலம்  »

ஹைக்கூ

ராஜகவி ராகில் – கவிதைகள்

பெண் விடுதலை பற்றி
பேசியவன் பையில்
வீட்டுச் சாவி

ஓடையாக இருந்தாலும்
உன்னை நதியாக்குகிறது
நம்பிக்கை
நம்பிக்கை உதிர்கின்ற போதுதான்
நிகழ்கிறது
முதல் மரணம்

நிலம் உழுகின்ற
உழவனைகிழித்து விடுகிறது
சமூக ஏர்

பூமிக்கு மேல்
புதை குழி
கட்டில்

உழவனை
நிமிர்ந்து பார்க்க மறுக்கிறது
நெற்கதிர் கூட

ஏழையைச் சாப்பிட்டு
ஏப்பமிடுகிறது
சோறு

 » Read more about: ராஜகவி ராகில் – கவிதைகள்  »

புதுக் கவிதை

நான்

மாடிமனை கட்டி யதில்
வாழ்ந்தவனும் ”நானே”
கோடிபணம் சேர்த் தங்கே
குவித்தவனும் ”நானே”
நாத்திகனாய்க் கதை பேசி
வென்றவனும் ”நானே”
கூத்திகளோ டிரவு பகல்
கொஞ்சியவன் ”நானே”

 » Read more about: நான்  »

ஹைக்கூ

கவிநுட்பத் துளிப்பாக்கள்

1

” பாட்டியின் சேலை…!
கிழிந்தும் உதவியது
பேரனுக்கு தொட்டில்”

2

குழந்தையை சுமந்தாள்
கூடவே ஒட்டிக்கொண்டது
தாய்மை

3

மலர்ந்தது ரோஜா
பறிக்கும்  முன் முத்தமிட்டது
வண்ணத்துப் பூச்சி

4

மரத்தில் குழந்தை சிற்பம்
அணைத்து முத்தமிட்டாள்
குழந்தை இல்லா தாய்

5

புதுமைப் பெண்ணோ
தனிமையில் செல்கிறது
நிலா

6

“நட்சத்திரம் சிரித்ததோ
சிதறிக் கிடக்கிறது
மெரீனாவில் முத்துக்கள்”

 » Read more about: கவிநுட்பத் துளிப்பாக்கள்  »

புதுக் கவிதை

நாணுகிறேன்!

வெட்கத் தாழ்
போட்டு நாணுகிறேன்!

கனவுகளில்
துகிலுரித்து
பார்க்கிறாய்!

கவலைகள்
கடிணங்கள்
எதுவுமில்லை!

மழலையாய்
உன் மடியில்
மலர்கின்றேன்!

 » Read more about: நாணுகிறேன்!  »

தன்னம்பிக்கை

வார்த்தை வன்மை

நாக்கு வன்மையானதுதான். இதனால் நாவின் உதவியோடு உருவாகி வெளிப்படும் வார்த்தை அதைவிட வன்மையானது. இதைக் குறித்து வள்ளுவர் தனது 129 வது குறட்பாவில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

தீயினாற் சுட்டப்புண் உள்ளாறும் இறாதே
நாவினாற் சுட்ட வடு.

 » Read more about: வார்த்தை வன்மை  »