மரபுக் கவிதை

கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!

புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு 
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!

ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !

 » Read more about: கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!  »

மரபுக் கவிதை

வாழவைக்கும் காற்றாய் வாவா

எதற்கிந்த சீற்றமுடன் வீசு கின்றாய்
        எல்லாமும் அழிப்பதற்கா புயலாய் வந்தாய்
பதவியிலே இருப்பவர்கள் நாட்டை யின்று
        பாழ்செய்து வளம்சுருட்டிக் கீழே தள்ள
மதவெறியர் ஒருபக்கம் எரித்து நிற்க
 

 » Read more about: வாழவைக்கும் காற்றாய் வாவா  »

மரபுக் கவிதை

நதிக்கரை ஞாபகங்கள்

மழை பெய்த மலைகளிலே
        மறுகி ஓடும் நீரோடை;
குறுகிய தோர் காட்டாறு
        கூடி வீழும் அருவிகளும்;
அடித்து வந்த மூலிகையின்
 

 » Read more about: நதிக்கரை ஞாபகங்கள்  »

மரபுக் கவிதை

தீபாவளி -அன்றும் இன்றும்

ஏற்றிடுவோம் தீபத்தை நன்னாளில்
      எத்திக்கும் பரவிடுமே மகிழ்ச்சிவெள்ளம்
போற்றிடுவோம் பண்டிகையை அந்நாளில்
      பொங்கிடுமே புதுவாழ்வு மக்களிடம்
மாற்றங்கள் வந்திடுமா நாள்தோறும்
 

 » Read more about: தீபாவளி -அன்றும் இன்றும்  »

மரபுக் கவிதை

காமத்தின்  கண்பறிப்போம்

மலராத  மொட்டதனின்  இதழ்கி  ழித்து
       மதுவுண்ட   வண்டொன்றைப்  பார்த்த  துண்டா
புலராத  இரவுக்குள்  புணர்தல்  போன்று
       புரிந்திட்டார்   வன்செயலைக்  கயவர்  சில்லோர் !

 » Read more about: காமத்தின்  கண்பறிப்போம்  »

கவிதை

பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை

பூஞ்சோலை மணக்கிறது.
ஒவ்வொரு பூக்களுமே சிரிக்கிறது.

பூவாக மொட்டுகள் துடித்திடவே.
பொன்னூஞ்சலில் மனம் ஆடிடவே.

மாந்தோப்பில் கிளிகள் கொஞ்சிடவே
மாம்பழத்தை வண்டுகள் துளைத்திடவே

மேகமதைக் குயில்கள் அழைத்திடவே
மேனியெல்லாம் குளிர் சிலிர்த்திடவே

கார்மேகத்தால் மயில்கள் ஆடிடவே
காட்சிகளைக் கண்கள் பதித்திடவே

தென்றல் தேகத்தைத் தழுவிடவே
தேனிசையை மூங்கில்கள் இசைத்திடவே.

 » Read more about: பூஞ்சோலையில் ஒரு பொன்வீணை  »

மரபுக் கவிதை

தந்தைக்கு ஒரு தாலாட்டு!

பத்துமாதம் வயிற்றுக்குள்
பத்தியமாய்ச் சுமக்கவில்லை
சித்தத்தில் உன்நினைவைச்
சிறிதேனும் இறக்கவில்லை!

தாலாட்டிப் பாலூட்டிப்
பார்த்திருந்தே இரசிப்பதில்லை!
ஆளாகி நீஉயர
அறிவுருத்த மறப்பதில்லை!

உயிரிருந்தால் போதுமென்ற
உணர்வுடனே இருப்பதில்லை!

 » Read more about: தந்தைக்கு ஒரு தாலாட்டு!  »

அஞ்சலி

தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா

இசைப்பாக்கள் இயற்றுதற்கு இலக்க ணத்தை
        இயற்றிட்ட திருமுருகன் வழியில் நின்று
திசைமாறிப் போகாமல் திறமை யோடு
        தித்திக்கத் தெளிதமிழாம் ஏட்டைத் தந்தார்
விசையாகத் தனித்தமிழின் இயக்க மோங்கி
 

 » Read more about: தார்புகழ வாழ்ந்திடுவார் தங்கப்பா  »

மரபுக் கவிதை

எத்திசையும் முழங்கிடுவோம்

பையவே பிறநாட்டார் கையசைத்த பொழுதில்
நாவசைத்த மொழியென்றார் கவிக்கோ அன்று
பையப்பைய நடக்கும் அகழ்வாராய்ச்சியில்
பகிரங்கமாய்ச் சான்றளிக்கிறது கீழடி இன்று.

குறுகத் தரித்த குறளில் வள்ளுவத்தின்
குரலோசை மொழிபெயர்ப்பில் உலகெங்கும்.

 » Read more about: எத்திசையும் முழங்கிடுவோம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர் தினம்

சிலையாகிப் போனபின்னும்
சித்திரமாய் இருந்திடாமல்
உழைக்கின்ற மானிடரே !
உலகத்தின் ஆணிவேரே !
களைப்படையா உழைப்பாலே
காலமுழுதும் நிலைப்போரே !
பிழைப்பதற்கு இவ்வழிபோல்
பிறிதொன்று இல்லையே !

 » Read more about: உழைப்பாளர் தினம்  »