மரபுக் கவிதை
கஜா புயல் கோரத்தாண்டவம் — ஆழ்மனத்தின் மொழி !!
புயலாலே உருக்குலைந்து புலரவில்லை எம்வாழ்வு .
மயங்கியுமே வீழ்ந்தோமே மறுவாழ்வும் இல்லையினி .
பயம்கொண்ட நெஞ்சத்தைப் பாதுகாப்போர் யாருண்டு
பயன்பட்ட நிலமெல்லாம் பாழ்பட்ட சோகமிங்கே !!
ஆசையாக வளர்த்தோமே அழகழகாய்த் தென்னையினைப்
பாசமாக வைத்திட்டப் பனைமரங்கள் காணலையே !