ஹைக்கூ

நிழல்கள்

1.

வாழும் கடவுளை
வீதியில்
விட்டு விட்டு
கோவிலில் தேடுகிறான்
“இல்லாத கடவுளை ”

2.

நிழல் தரும் மரங்கள் தான்
நிம்மதியை தரும் என்பதை
எப்போது உணர போகிறான் ??

 » Read more about: நிழல்கள்  »

புதுக் கவிதை

மரிக்கொழுந்து

தண்ணிக் கொடமெடுத்து
தனியாகப் போறவளே
தாய்மாமன் நானிரிக்கன்
தாகத்தோட தானிரிக்கன்

தண்ணியூத்த முறையுமில்ல
தாகந்தீர்க்க வழியுமில்ல
மஞ்சக் கயிறு தந்தியன்டா
மரிக்கொழுந்தா வந்திடுவன்

வேகத்தோட நீ பறந்தா
தேகத்தோட வேகுதடி
தாம்பூலம் மாத்த வாறன்
தாமதமாப் போனா என்ன

தாமதிச்சி நான் போனா
பேமிதிச்சிப் போட்டுடுங்கா
பேசாம இருந்து போட்டு
கூசாம வந்து கேளு

தங்கத்துல செம்பு செஞ்சி
தலைக்கிமேல ஒன்ன வெச்சி
தாங்கத்தான் நெனச்சிரிக்கன்
தாரமா நீ வாடி புள்ள

வீரமா நீ பேசக்குள்ள
வீராப்பா இரிக்கி மச்சான்
வேணாண்டு சொல்லிப் போட்டா
வேகி நொந்து தவிச்சிருவன்

பெரு முல்லக் காடிரிக்கி
பெருத்த ரெண்டு ஆடிரிக்கி
கக்கத்துக்க வாடிபுள்ள
பக்கத்தில யாருமில்ல
மாட்டு வண்டி ஓட்டினாலும்
மாசால ஒண்டும் கொறயலகா
மால மகரி நேரமாச்சி
மாட்டப்போடு தூரமாச்சி.

 » Read more about: மரிக்கொழுந்து  »

புதுக் கவிதை

வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று
என்னை இழுக்க
விடைத்தேடி
நானும் அந்த பாதை கடக்க
அழகாக மங்கை அவள்
அங்கு பூத்திருக்க
அவளின் அழகில்
மயங்கி நானும் பாத்திருக்க
காதல் எனும் கனை ஒன்று
என்னை அடிக்க
பூத்திருந்த மலர் பறித்து
நானும் புன்னகைக்க
பாத்திருந்த மங்கை
அவள் காதலை ஏற்க
காதல் வானில்
இருவரும் சேர்ந்து பறக்க
சதி எனும் விதி ஒன்று
எங்களை கடக்க
துணையாய் பறந்தவள்
காதலெனும் உறவை முறிக்க
அவளின் பிரிவால் நாளும்
எந்தன் இதயம் துடிக்க
கண்கள் கலங்கி
நானும் கவிதை படைக்க
படித்து பார்த்த
அவளின் இதயம் துடிக்க
வானேரி பறந்து விட்டாள்
எந்தன் நினைவை மறக்க
வாழ்வின் முடிவெதுவென
நானும் நினைக்க
காவி கட்டி
அமர்ந்து விட்டேன்
வாழ்வை துறக்க!

 » Read more about: வாழ்வை துறக்க  »

புதுக் கவிதை

மண் வாசனை

1.

வளங்கள் பொங்குமா கடலிடை நிமிர்ந்து சிரிக்கிற நம்மட முத்து..

கமுகும், தெங்கும், ரப்பர், தேயிலை, மலையும், பள்ளத்தாக்கும்,

வான் முட்ட மரங்களும்,

 » Read more about: மண் வாசனை  »

மரபுக் கவிதை

புதுமைப்பொங்கல் பொங்கிடுவோம்

கழிக்கின்றோம் பழையவற்றைக்
காணவாரீர் எனவழைத்தே
விழியெரிய நேயத்தை
விளையன்பை எரியவைத்தே
கழிவென்றே மனிதத்தைக்
கருகவைத்துக் கணியன்தன்
வழியடைத்துக் கொளுத்துகின்ற
வன்முறையா போகியிங்கே !

 » Read more about: புதுமைப்பொங்கல் பொங்கிடுவோம்  »

புதுக் கவிதை

தேவதை

இந்த பூமிக்கு
இரண்டே இரண்டு
தேவதைகள்தான் …
இன்று நீ
நாளை நம் மகள் …

உன் வீட்டின்
வாசலிலிருந்துதான்
தொடங்குகிறது
என் உலகம் …

 » Read more about: தேவதை  »

புதுக் கவிதை

” மண் வாசனை”

கரும்பு கொல்லைக்குள்ளே..
கட்டை வெதைக்கையிலே..
ஏங்கண்ணுக்குள்ள.. ஓங்கண்ண..
வெச்சு புதைச்சுப் புட்ட..

மொளைச்சி வார புல்லு போல..
மனசுக்குள்ள துளுத்து வளந்துபுட்ட..
மண்ணணைச்சு வெக்கறப்போ
மனசணைச்சி நின்னுகிட்ட..

 » Read more about: ” மண் வாசனை”  »

புதுக் கவிதை

எனக்குப் பிடித்த தனிமையுடன்….

வெகுநேரம் மௌனத்துடன்
பேசிக் கொண்டே இருக்கின்றேன்
எனக்குள்ளே தொலைந்து தொலைந்து
என்னையே நான் தேடுகிறேன்

எனக்குள்ளே வினாக்கள் தொடுத்து
இதமான விடையை எழுதுகிறேன்
மனக் கணக்கு போட்டு போட்டு
சாதக விடியலைக் காண்கின்றேன்

கண்களுக்குள்ளே கனவுகள் பதித்து
கவிதைகள் நூறு படைக்கின்றேன்
கதைகளுக்குள்ளே ஆழ்ந்து மூழ்கி
கதாப்பாத்திரங்களுடன் உறவாடுகின்றேன்

கடந்துபோன ஞாபகங்களை
இதய ஏட்டில் புரட்டுகிறேன்
காயப்பட்ட நிகழ்வுகளுக்கு
மறதியை மருந்தாய் பூசுகிறேன்

மாய உலகில் சஞ்சரித்து
மறுமையைக் காணத் துடிக்கின்றேன்
ஆருயிரான ஆன்மாக்களுடன்
அளவளாவி மகிழ்கிறேன்

ஆத்திரத்தில் உதிர்த்த வார்த்தைகளை
சொல்லாட்சியில் அழிக்கின்றேன்
அறியாது செய்தப் பிழைகளுக்கு
மனசாட்சியிடம் மண்டியிடுகின்றேன்

எனக்குப் பிடித்த ஏகாந்தத் தனிமை
என்றும் என்றும் என்னுடனே
பிணக்குக் கொண்டுப் பிரிந்தாலும்
திணித்து எனக்குள் வாழ்ந்திடுவேன்!

 » Read more about: எனக்குப் பிடித்த தனிமையுடன்….  »

மரபுக் கவிதை

காலனைக் கண்டேன்!

பெருவெள்ளம் வந்தபோது காலன் றன்னைப்
…… பெருங்காட்சி யாய்க்கண்ணால் கண்டேன்’இன்னும்
ஒருபத்து மணித்துளியில் மூழ்கும்’ என்ற
…… உயிரச்சக் காட்சியாகக் கண்டேன் நானும்
தெருவோரம் பலவுயிர்கள் குப்பை யாகச்
……

 » Read more about: காலனைக் கண்டேன்!  »

மரபுக் கவிதை

என்ஓட்டம் என்இலக்கு

செந்தமிழே ஆட்சிமொழி; பள்ளி யெல்லாம்
        செந்தமிழே கல்விமொழி; தெருவி  லெல்லாம்
செந்தமிழே பேச்சுமொழி; வீட்டி லெல்லாம்
        செந்தமிழே மழலைமொழி;

 » Read more about: என்ஓட்டம் என்இலக்கு  »