ஹைக்கூ ஓர் அறிமுகம் – 18

தொடர் 18 ஹைக்கூ என்பது வாசித்ததும் கடந்து போவதல்ல. வாசகனை கடந்து செல்ல விடாமல் சட்டென நிறுத்தி வசப்படுத்துவதே நல்ல ஹைக்கூ. அத்தகைய ஒரு ஹைக்கூவானது எக்காலத்திலும் எழுதப்படலாம். நிகழ்காலத்தில் தான் எழுதப்பட வேண்டுமென கட்டாயப்படுத்துவது தவறு. ஹைக்கூவில் பிரதானமாக கடைபிடிக்க வேண்டியவை என.. ஹைக்கூ வரலாற்று ஆசிரியரும், தொகுப்பாளருமான ஆர்.எச்.பிளித் (R.H.Blyth) ஹைக்கூவிற்கென எட்டு குறிப்புகளைத் தருகிறார். நகைச்சுவை சுருக்கம் ஜப்பானிய மொழிஇயல்பு இரட்டைக்கிளவி ஹைக்கூ யாப்பு கிரெஜி Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 17

தொடர் 17 ஹைக்கூவில்… இறந்தகாலம்.   ஹைக்கூ மட்டுமல்லாது… அனைத்து வகை கவிதைகளுமே… கண்டு உணர்ந்த அல்லது பார்த்து ரசித்த அனுபவத்தின் வெளிப்பாடே.. ஹைக்கூவினை நிகழ்காலத்தில் தான் எழுத வேண்டுமென்ற விதிமுறையை கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களோ , ஹைக்கூவினை ஆய்வு செய்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த கவிஞர். நிர்மலா சுரேஷ் அவர்களோ எங்கும் குறிப்பிடவில்லை. இதில் ஒன்றை தெரிந்து கொள்ள முடிவது என்ன வென்றால் 1990க்கு முன்னதாக தமிழ் ஹைக்கூ Read more

Moon inside the well

ஹைக்கூ (Haiku) தமிழ் இலக்கியத் தளத்தில் தவிர்க்க முடியாத கவிதை வடிவமாக நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டே வருகின்றது. ஹைக்கூ ஜப்பானிய இலக்கிய வடிவம் என்றாலும், 17 ம் நூற்றாண்டில் பாசோ இதனை மேலும் மெருகூட்டப்பட்ட கலையாக் வடிவமைக்க, இவ்வடிவம் தனித் தன்மையடந்தது. தமிழில் 1980 களில் ஹைக்கூ கவிதைகள் பல எழுதப்பட்டன. அமுதபாரதியின் புள்ளிப்பூக்கள், அறிவு மதியின் புல்லின் நுனியில் பனித்துளி, ஈரோடு தமிழன்பனின் சூரியப் பறவைகள் என்பன Read more

மாற்றி யோசி

அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது. அவசர அவசரமாக கதவை திறந்து பார்த்த போது அதன் ஓடுபாதை மேற்புறமுள்ள சுவற்றை நோக்கி இருந்தது. நான் மெதுவாக சுவரோரம் கிடந்த பிளாஸ்டிக் பையை எடுத்து விட்டு பார்த்தேன். Read more

சங்க இலக்கியமும், தற்காலமும்!

முல்லைத்திணையும், முற்றுபெறாதக் காத்திருப்பும்… முல்லைக்குரிய உரிப்பொருள் ‘‘இருத்தலும் இருத்தல் நிமித்தமுமாகும்’’ (தொல்காப்பியம், இளம்., ப.30) வினைமேற்சென்ற தலைவன் வினைகளத்தே இருப்பதும் அவனுக்காகத் தலைவி காத்திருப்பதும்.. ‘நெஞ்சாற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு நீலுநினைந்து தேற்றியு மோடுவளை திருத்தியு மையல் கொண்டு மொய்யென வுயிர்த்து மேவுறு மஞ்ஞையி னடுங்டகி யிழைநெகிழ்ந்து. (முல்லைப்பாட்டு..) அன்றும் இன்றும் என்றும்..காத்திருப்பு கடினமானதே.. போரின் பொருட்டோ…பொருளின் பொருட்டோ தலைவன் பிரிந்து செல்ல அவனை நினைத்துக் காத்திருக்கும் தலைவிக்கும்.. இன்றும் Read more

பாரியன்பன் கவிதைகள்

விழி கொண்டு மலரும் காதல் மொழி கொண்டு நகரும் கவிதை. மறந்திடாமல் சொல்ல நினைத்த கவிதையொன்று தொலைந்து போனது. இமைகளின் அனுமதியின்றி உறக்கம் தழுவுவதில்லை விழிகளை. கிளையைப் பிரிந்த சருகு சில கணங்கள் நீந்திப் பழகுகிறது காற்றில். வீட்டில் வளர்ப்பு நாய் எச்சிலிலையில் ஏதுமில்லை பாவம் தெருநாய். நிறைவுற்றது பயணம் வழக்கம் போல் வீதியில் விட்டுவிட்டாய் பிரியமின்றி தவிக்கிறேன். இருட்டிலிருக்கிறேன் உற்றுப்பார் நிழலாய் தெரியலாம் நான். சுடறேற்ற பயம் போயிருக்கும். Read more

மனப் பெயர்வு

வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கடத்தியது போதுமென அடுக்ககத்தின் புது மனையில் நுழையும் ஆயத்தப் பணியில் அனைத்தும் எடுத்து வைத்தாயிற்று ஏதேனும் மறந்துவிட்டோமா என ஒவ்வோர் இடமாய் கண்களால் துழாவும் வேளை வாங்கியதில் இருந்து பூக்காமல் ஏங்கவைத்த அந்தச் சாமந்திப் பூச்செடி அன்றுதான் மொட்டு விட்டிருந்தது

இலங்கையில் சிங்களவர்

இலங்கை அரசின் இனவெறிப் படுகொலைக்குத் துணை நிற்கும் நடுவணரசும் ஏன் தமிழக அரசும், உருசியா, சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளும், ஏனைய உலக நாடுகளும் வரலாற்றுப் பிழை செய்வதை இந்நூல் அரண் செய்கின்றது. தமிழர் யார்? சிங்களவர் யார்? இலங்கையின் வரலாறு என்ன என்பதையும், அறிவியல் முறையிலான மரபணுக்கூறு இயல், மானிட இயல், தொல்லியல் சார்ந்த மண்டைஓடு, எலும்புகள், கலங்கள் பற்றிய ஆய்வியல், நாணயவியல், நிலவியல், சமுதாய இயல், மொழியியல், Read more

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’ ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட, ‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன், இந்த அலையோசையை தவிர. அலையோசை அருமையான நாவல்னு கேள்விப்பட்டிருக்கேன். படிக்க ணும்னு ரொம்ப நாளா ஆசை’’ என்ற ரெங்கா, ‘‘இருவத்தஞ்சு கடைக்குமேல போட்டி ருக்கானாம். ஏதாவது ஒரு கடையில புத்தகம் நிச்சயம் கிடைக்கும்’’ என்று கூறிவிட்டு கட்டைகள் ஊன்றி Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 16

தொடர் 16 ஹைக்கூவில் ஜென். சென்ற அத்தியாயத்திலேயே கவனித்து விட்டோம். ஜென் என்பது மதமல்ல. நீ உன்னை ஆழ்நிலை வழியாகத் தேடி அடைவதே. ஜென்… சுருக்கமாய், வாழ்வியலின் உள்ளார்ந்த ஈடுபாடே ஜென். ஜென் கூற்றுப்படி..இந்த உலகம் மனிதனுக்கானது மட்டுமல்ல. வாழும் அனைத்து உயிர்களுக்குமானது. சிற்றுயிர்களையும் நேசிக்கக் கற்றுத்தருவதே ஜென். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன். என்ற வள்ளலார் கூட ஒருவகையில் ஜென் துறவி எனக் கூறினால் தவறி்ல்லை. தாவரங்களோடு Read more