• விழி கொண்டு
    மலரும் காதல்
    மொழி கொண்டு
    நகரும் கவிதை.

  • மறந்திடாமல்
    சொல்ல நினைத்த
    கவிதையொன்று
    தொலைந்து போனது.

  • இமைகளின்
    அனுமதியின்றி
    உறக்கம் தழுவுவதில்லை
    விழிகளை.

  • கிளையைப் பிரிந்த சருகு
    சில கணங்கள்
    நீந்திப் பழகுகிறது
    காற்றில்.

  • வீட்டில்
    வளர்ப்பு நாய்
    எச்சிலிலையில் ஏதுமில்லை
    பாவம் தெருநாய்.

  • நிறைவுற்றது பயணம்
    வழக்கம் போல்
    வீதியில் விட்டுவிட்டாய்
    பிரியமின்றி தவிக்கிறேன்.

  • இருட்டிலிருக்கிறேன்
    உற்றுப்பார்
    நிழலாய் தெரியலாம்
    நான்.

  • சுடறேற்ற
    பயம் போயிருக்கும்.
    அறையினுள் தனியாய்
    தவிக்கும் இருட்டுக்கு.

  • சிறிது நேரத்தில்
    அவளின் வருகை.
    அப்போது நான் அவளாக
    அவள் நானாவேன்.

  • நிரம்பி விட்டாய்
    இன்னும் ஊற்றாதே!
    வழிய வழிய
    மண் தின்னும் உன்னை.

  • உன் நினைவுகளைத் தவிர
    உன்னுடையதென்று
    ஏதுமில்லை
    என்னிடத்தில்…!

  • அகலில்
    நெய்யாய் இருக்கிறேன்
    திரியாக வா
    காதல் சுடராகி ஒளிர்வோம்.

  • கெட்டும்
    நெத்தும்
    வேண்டாம்
    உற்றார் வீடு.

  • நீ ஏறுகிறாய்
    நான் இறங்குகிறேன்.
    இருவரும் சந்திக்குமிடம்
    சமதளம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்