ஹைக்கூ ஓர் அறிமுகம் – 60

தொடர் 60 மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும். மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும். தமிழ் மொழி உலகளாவிய மொழிகளில் தனிச் சிறப்பு கொண்டதாகும்.. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.. ஆனால் ஜப்பானிய மொழியோ சீன மொழியின் வளர்ப்பு பிள்ளை தான். அதன் இலக்கிய மரபும் கி.பி.யில் துவங்கிய Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 59

தொடர்  59 ஹைக்கூ உலகில் திருக்குறள் மற்றும் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கவிதை வடிவமாக இன்று திகழ்கிறது. அதுமட்டுமல்லாது.. இந்தியாவில் தமிழ் நாட்டில் பல மாணவர்கள் ஆய்வுக்கு கையாளும் கவிதை வடிவமாகவும்..பல கவிஞர்களின் முதல் கவிதைத் தொகுப்பு நூலாகவும் ஹைக்கூவே இன்று இருக்கிறது. இதெல்லாம் ஹைக்கூவின் குறுகிய கால வளர்ச்சியே ஆகும். ஹைக்கூ கவிதைகளை ஒவ்வொரு முறை வாசிக்கும் போதும் பல புதிய சிந்தனைகளை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 58

தொடர் 58 ஹைக்கூ கானகத்தில் மலர்ந்துள்ள காட்டுமலர் போன்றது. அந்த மலரை அங்கு உருவாக்கியது யார்..? மனிதனா..?! நிச்சயம் இல்லை. இயற்கை..! ஆம். ஹைக்கூவும் இயற்கையின் ஒரு அற்புத சிருஷ்டி எனலாம். எழுதுபவரை மட்டுமல்லாது..வாசகனையும் வசீகரிக்கும் ஆற்றல் ஹைக்கூவிற்கு உண்டு.. ஆம். இயற்கையின் அற்புதப் படைப்பு அந்த கானகமெங்கும் விரவியிருக்கும் மலர்கள், எத்தனை வண்ணங்கள்.. ஒவ்வொன்றிலும் ஏதோ ஒரு வித மணம். காலையில் மலர்ந்த மலர்கள் பலவித வர்ணங்களிலும், இரவினில் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 57

தொடர்  57 வண்ணங்களைத் தேடியலையும் வண்ணத்துப்பூச்சிக்குத் தெரியாது தன் வண்ணம். கவிஞர். கழனியூரன் இந்த கவிதையை கவனியுங்கள். புழுவாய் பிறந்து, பூச்சியாய் மாறி, பறந்து திரியும் வண்ணத்துப் பூச்சி தன் மேனியில் பல வண்ணங்களைக் கொண்டிருந்தாலும், பல வண்ண மலர்களைத் தேடி அலையும். அதற்கு தன் மீதுள்ள வண்ணம் பற்றி அறிந்திட இயலுமா..?! கவிஞரின் பார்வை வண்ணத்துப் பூச்சியை மட்டுமா சார்ந்திருக்கிறது.. பல மனிதர்களின் குணாதிசயங்கள், இயல்புகள் இப்படித்தானே இருக்கின்றன. Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 56

தொடர் 56 நாம் காணப் போவது, ஹைக்கூ கவிதையில் மிக முக்கியமான விசயம். ஒரு ஹைக்கூ கவிதையில் எவையெல்லாம் இடம் பெறலாம். எவையெல்லாம் தவிர்க்க பட வேண்டும் என்பதை இந்த பகுதியில் காண்போம். முதலில் ஹைக்கூவில் இவை அவசியம் இடம்பெற வேண்டியவை என எவற்றையெல்லாம் சொல்லலாம் எனக் காண்போம். கவிதையில் கிகா எனப்படும் பருவகாலம் அவசியமாய் காட்டப்பட வேண்டும்..சில கவிதைகளில் தவிர்க்க வேண்டியதிருப்பின் தவறில்லை. பருவகாலம் என்பது நேரடியாய் பருவ Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 55

தொடர்  55 ஹைக்கூ கவிதைகள் நம்முடைய வாசிப்புத் திறனை சுவாரஸ்யமாக்குவது மட்டுமின்றி, நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் மேம்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு அடிகளிலும் நமது சிந்தனைகளை விரிவடையச் செய்வது இதன் தனிச் சிறப்பு. நமது இந்திய நாட்டில் போக்குவரத்தில் கடைப்பிடிக்கப்படும்.. நில் கவனி செல். எனும் வாசகம் கூட மிகச்சிறந்த ஹைக்கூ என்று சொன்னால்.. தவறில்லை என்பேன். நில்… ஏன்.. எதற்கு.. என்ற கேள்விகள் இங்கு தொக்கி நிற்கிறது..முதலடியில். கவனி.. எதை Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 54

தொடர்  54 தமிழ் ஹைக்கூ உலகில், தவிர்க்க இயலாத ஒரு ஆளுமையாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். பன்முகத் தன்மை கொண்டவர். அவரது சில ஹைக்கூ மற்றும், சென்ரியுக்களை இங்கு காண்போம். விட்டிலின் சிறகு எழுதியது ஒளியின் ஸ்பரிசமே மரணம். அனைவரும் அறிந்த விசயந்தான். விட்டிலானது விளக்கினில் விழுந்து மாய்ந்து போகுமென்பது.  தெரிந்த தகவலொன்றை ஹைக்கூவில  சொல்லி நகர்கிறார்கள் எனில் அங்கு பூடகமாக வேறொன்றைச் சொல்ல வருகிறார்கள் என்பது பொருள், Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 53

தொடர்  53 ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் பிரபலமான #இஸ்ஸா #பூசன் மற்றும் #ஷிகி ஆகியோர் ஹைக்கூ உலகிற்கு நல்கிய சில கவிதைகளை இவ்வாரம் உங்களின் பார்வைக்குத் தருகிறேன்.. கொபயா ஷி இஸ்ஸா (1763_1827 ) கிராமியக் கவிஞர் இவர்..இளம் வயதில் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளானவர்..சிற்றுயிர் நேசர்…பூனை..ஈ.. போன்ற உயிரினங்கள் பால் மிகுந்த அன்பினைச் செலுத்தியவர். ** மலை ஏறு ஓ..நத்தையே மெதுவாக..மெதுவாக. ** கொல்லாதே கைகளையும் கால்களையும் தேய்த்துக் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52

தொடர் – 52 உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. நமது தமிழ் இலக்கியத்தின் சங்ககால அகநானூற்றுப் பாடல் ஒன்று.. துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை அரிமலர் ஆம்பல்மேய்ந்த நெறி மருப்பு ஈர்ந்தண் எருமைச் Read more

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51

தொடர் – 51 உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ.. பழைய குளம் தவளை தாவிக் குதிக்க நீரில் சப்தம். The old pond a frog jumps in the sound of the water. பழைய குளம் என்றாலே அது பாழடைந்த குளமாகவும்..குப்பைகளால் நிரம்பி நீரற்றுப் போன ஒரு நிலையையே Read more