தொடர்  53

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் பிரபலமான #இஸ்ஸா #பூசன் மற்றும் #ஷிகி ஆகியோர் ஹைக்கூ உலகிற்கு நல்கிய சில கவிதைகளை இவ்வாரம் உங்களின் பார்வைக்குத் தருகிறேன்..

  • கொபயா ஷி இஸ்ஸா (1763_1827 )

கிராமியக் கவிஞர் இவர்..இளம் வயதில் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளானவர்..சிற்றுயிர் நேசர்…பூனை..ஈ..

போன்ற உயிரினங்கள் பால் மிகுந்த அன்பினைச் செலுத்தியவர்.

**

மலை ஏறு
ஓ..நத்தையே
மெதுவாக..மெதுவாக.

**

கொல்லாதே
கைகளையும் கால்களையும்
தேய்த்துக் கொள்கிறது _ ஈ..

**

நான் படுத்துக் கொண்டு
உருளப் போகிறேன்
நகர்ந்து செல் வெட்டுக்கிளி.

**

எல்லா நேரத்திலும்
புத்தரிடம் பிரார்த்தனை
நான் கொன்று கொண்டேயிருந்தேன்.
கொசுக்கள்.

சற்றே கவனியுங்கள். சின்ன உயிர்களை சிறப்பித்துப் பாடிய அவர் தான், அதே சின்ன உயிர் தனக்களித்த தொந்தரவிற்கு அதற்கு மரணத்தை பரிசாக வழங்கி விட்டு, இறைவனிடம் மன்னிப்பு கேட்கத் துவங்கி விட்டார்.

இது மக்களின் இயல்பு. இதையே வேறொரு கவிதையில் கையாள்வதை கவனியுங்கள்…

மக்கள் அறிவது எப்படி எனத் தெரியாது
ஆனால், அனைத்து சோளக்காட்டு
பொம்மைகளும் வளைந்தே இருக்கும்.

இஸ்ஸாவின் ஜப்பானிலும் கூட பறவைகளை விரட்ட சோளக்காட்டு பொம்மைகளை வயற்பரப்புகளில் நிறுத்துகிறார்கள் என்பதோடு,  மனிதர்கள் வளைந்து கொடுத்து வாழ்ந்தால் எளிதில் எவ்வித துயரிலிருந்தும், பிரச்சனைகளில் இருந்தும் மீளலாம் என்பதை நாசுக்காக சொல்லி நகர்ந்து விடுகிறார்.

  • யோஸோ பூசன் ( 1716 – 1784 )

இவர் வரைகலை ஓவியர். ஓவியத்தின் வாயிலாக ஹைக்கூவை பிரபலப் படுத்தியவரும் கூட..  தனது எழிலார்ந்த ஓவியத் தூரிகையால் பாஷோவின் கவிதைகளையும் மெருகூட்டியவர் எனலாம்.

இவரது சில கவிதைகள்..

**

வெள்ளைப் பூக்கள்
பெண் ஒருத்தி நிலவொளியில்
கடிதம் படித்தபடி.

**

செர்ரி மலர்கள் பூத்து உதிர்ந்தன
கிளைகளின் வாயிலாக
ஒரு கோயில்.

**

பனி விழுந்த முள்செடி
அற்புத அழகு
ஒவ்வொரு முள்ளிலும் துளி.

**

ஆயிரம் பெண்கள் கொண்ட கிராமம்
சந்தைக் கடை ஓசை.
காலை மூடுபனியில்.

பெண்கள் எல்லா நாட்டிலும் ஒன்று போலவே.. அவர்கள் இருக்குமிடம் சலசலப்பிற்கு பஞ்சமில்லை. இந்தக் கவிதையை கொஞ்சம் ஊன்றி கவனிக்கும் போது பூசன் நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் தெரிகிறார்.

சற்றே கவனித்தால் தெரியும் பூசனின் ஓவியப் பார்வை, தூரிகை கொண்டு தீட்டிய ஓவியம் போல் அவரது கவிதைகளில் மிளிர்ந்த அழகு.

  • மாஸ ஒகா ஷிகி ( 1867 -1 902 )

 

ஏற்கனவே சொன்னது போல், இவரே ஹைக்கூவில் கற்பனையை தவிர்க்கச் சொன்னவர். ஹைக்கூ கவிஞர்களில் புரட்சிவாதி.. புரட்சிக்குயில்..

பாஷோவின் கவிதைகள் வீரியமற்ற மந்தத்தன்மை கொண்டவை எனச் சாடியவர்.

இடிந்த வீட்டில்
யுத்தம் முடிந்த பின்னே
காய் மரம் பூத்துள்ளது.

**

இலையுதிர் கால கொசு
என்னைக் கடித்த பின்
மரணமடைய தீர்மானித்தது.

**

மலர் சாடியில் செருகித் தொங்கும் நீலமலர்கள்.
நோய்படுக்கையில்
வசந்தம் இரவாகிறது.

ஹைக்கூவை வேறொரு தளத்திற்கு நகர்த்திச் சென்ற பெருமைக்குரியவர்.

உள்ளதை உள்ளபடி சொல்லி உண்மைக்கு அருகில் நில்லுங்கள் என ஹைக்கூ கவிஞர்களுக்கு வழிகாட்டியவர். ஷிகி.

இன்னும் வரும் 

 முன் பதிவு 52


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.