தொடர்  54

தமிழ் ஹைக்கூ உலகில், தவிர்க்க இயலாத ஒரு ஆளுமையாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். பன்முகத் தன்மை கொண்டவர்.

அவரது சில ஹைக்கூ மற்றும், சென்ரியுக்களை இங்கு காண்போம்.

விட்டிலின் சிறகு எழுதியது
ஒளியின் ஸ்பரிசமே
மரணம்.

அனைவரும் அறிந்த விசயந்தான். விட்டிலானது விளக்கினில் விழுந்து மாய்ந்து போகுமென்பது.  தெரிந்த தகவலொன்றை ஹைக்கூவில  சொல்லி நகர்கிறார்கள் எனில் அங்கு பூடகமாக வேறொன்றைச் சொல்ல வருகிறார்கள் என்பது பொருள், என்றுமே ’’ பட்டு உணர்ந்தவனே ’’ பாதையை தெளிவாய்க் காட்டுவான். அங்ஙனமே, விட்டிலின் சிறகு இங்கு சொல்கிறது. ஒளியின் ஸ்பரிசமே மரணமென்று..

உண்மையில் ஒளியானது மரணத்திற்கு வழி வகுக்குமா..? இல்லை.. ஒளியானது நமக்கான விடிவு., ஒளியின் ஈர்ப்பில் விழுந்து மடிகிறோம் நாம். அந்த ஒளியே நம்மை பிரபஞ்ச இருளிலிருந்து விடுவித்து வெளியேற்றிக் கொண்டு போகிறது.

நம்மை ஈர்த்திடும் விசயங்களில் முன்யோசனை எதுவுமின்றி ஆபத்தைக் கூட உணராமல் ஈடுபட்டு தோல்வியை அல்லது துன்பத்தை தழுவுகிறோம்.

ஒளியென்பதும் நம்மை ஈர்க்கும் ஒருவகைத் துன்பமே ஒருவகையில்..

ஆனால் அதையே வாழ்விற்கான பெருவழியான ஞானமாக சிந்தித்தோமெனில், ஞானத்தை அடைய பல இன்னல்களை சந்திக்கத்தான் நேரும். விட்டில் பூச்சிக்கு ஒளியே மோட்சத்தை தருகிறது, அது தன்னை வருத்தி, மெய் விலக்க உன்னதம் அடைகிறது எனவும் கொள்ளலாம்.

ஹைக்கூ என்றுமே ஆழ்ந்த தேடலின் வெளிப்பாடென்பதை மறந்து விடக் கூடாது.

இதை கவனியுங்கள்..

பயம்
ஊர்ந்து கொண்டுதானிருக்கும்
இது பாம்பு போன தடம்.

பாம்பு கடந்து போய் பலமணி நேரமாகியிருக்கலாம். பல நாட்களாகி கூட இருக்கலாம். ஆனால் அது ஊர்ந்து நகர்ந்த இடத்தை கண்ணுறும் பொழுதெல்லாம், பாம்பு ஊர்வதைப் போன்றதொரு பிரமை நம்மை ஆட்படுத்திக் கொண்டிருப்பதை மாற்ற முடியாது. ஹைக்கூ கவிதையும் நீங்கள் படித்து முடித்து பலமணி நேரமாயினும் உங்களை தொடர்ந்து இம்சித்துக் கொண்டு, உங்கள் மனதில் வலம் வந்து கொண்டுதானிருக்கும்.

அவரது சென்ரியு ஒன்றை கவனியுங்கள்..

கடவுள்
கடைசி ஆசையைச் சொன்னார்.
பூசாரியாக பிறக்க வேண்டும்.

நிதமும் கைங்கர்யம் செய்யும் தொண்டனது நிலையை நினைத்து வருந்தியா இதை சொல்லியிருப்பார் கடவுள். இல்லை, தன்னை விட சுகபோக வாழ்வில் திளைத்து மகிழும் பூசாரியின் வாழ்வு தன் நிலைக்கு மேலானது என கடவுள் எண்ணி சொல்லியிருக்கலாம்.

ஹைக்கூ வாசிக்க, வாசிக்க நமக்குள் பலவித உள்ளக் கிளர்ச்சிகளை உருவாக்கி மறைபவை. ஒவ்வொரு முறையும் ஏதோ ஒன்றை நமக்கு சொல்லி நகரும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு உண்டு.

இன்னும் வரும்

முன் பதிவு 53


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.