தொடர் – 52

உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

நமது தமிழ் இலக்கியத்தின் சங்ககால அகநானூற்றுப் பாடல் ஒன்று..

துறைமீன் வழங்கும் பெருநீர்ப் பொய்கை
அரிமலர் ஆம்பல்மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந்தண் எருமைச் சுவல்படு முதுபோத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுதுபட
பைந்நிண வராஅல் குறையப் பெயர்தந்து
குரூஉக்கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர்செறி மள்ளரின் புகுதரும் ஊரன்.

அகநானூற்றின் 316 வது பாடலாக ஒரம்போகியார் எனும் புலவரின் பாடல் இது..

குளத்தில் ஆம்பல் மலர்களை மேய்ந்த எருமை ராத்திரியெல்லாம் அந்த குளத்தில் அலைந்து திரிந்து புரண்டு திளைத்து காலையில் எழுந்து வருகையில் திறட்சியான விரால் மீன்களை மிதித்து துவம்சம் செய்து குளத்தில் கட்டி உருண்டு சண்டையிட்ட மல்லன் போல அதன் கொம்பில் பகன்றை கொடியை சூடிய படி வெளியே வருகிறதாம்..

இப்பாடல் தலைவியின் தோழியானவள் தலைவனுக்கு கூறும் அறிவுரைப் பாடலாக பாடப் பட்டுள்ள ஒரு பாடல்..

இதே சாயலில் ஹைக்கூவில் ஆப்பிரிக்க நாவலாசிரியரும் ஹைக்கூ கவிஞருமான ரிச்சர்ட் ரைட் என்பவர் எழுதிய ஹைக்கூ கவிதையை கவனியுங்கள்..

காட்டிலிருந்து வரும்
மாட்டின் கொம்பில்
முல்லைக் கொடி.

  • ரிச்சர்ட் ரைட்.

இது போன்ற நிகழ்வுகள் எதேச்சையாக நிகழ்ந்தவை எனினும் சுவையானவை என்பதை மறுப்பதற்கில்லை.

நன்றி..எழுத்தாளர் சுஜாதாவின் ஹைக்கூ கட்டுரையில் இருந்து..

இன்னும் வரும்

முன் தொடர்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.