தொடர் 60

மொழி என்பது ஒரு இனத்தின் அடையாளம். பண்பாடு. நாகரீகம். கலாச்சாரம் போன்றவற்றின் ஒட்டுமொத்த பிரதிபலிப்பாகும்.

மொழியின் பெருமை அல்லது வளர்ச்சி என்பது அம்மொழி சார்ந்த இலக்கியத்தின் வெளிப்பாடாகத்தான் அமையும்.

தமிழ் மொழி உலகளாவிய மொழிகளில் தனிச் சிறப்பு கொண்டதாகும்..

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மை வாய்ந்தது தமிழ் மொழி.. ஆனால் ஜப்பானிய மொழியோ சீன மொழியின் வளர்ப்பு பிள்ளை தான்.

அதன் இலக்கிய மரபும் கி.பி.யில் துவங்கிய ஒன்று தான்.

ஹைக்கூ 15 ஆம் நூற்றாண்டில் மோரிடேகே..சோகன் போன்றோரால் துவங்கி 16 ஆம் நூற்றாண்டில் பாஷோ, இஸ்ஸா, பூசன்,ஷிகி போன்றோரால் வளர்த்தெடுக்கப்பட்டு இன்று, உலகமெங்கும் வளர்ந்து விரிந்து பரவிக் கிடக்கிறது.

இன்று.. உலகின் கவிஞர்கள் பலரால் நேசிக்கப்படும் ஒரு கவிவடிவம் ஹைக்கூ தான் என்பது அசைக்க முடியா உண்மை.

கவிஞனை மட்டுமின்றி வாசகனையும் தன்னோடு ஈர்த்துப் பயணிக்கும் படியான கவிவடிவமாக ஹைக்கூ திகழ்வதும்..அதன் எளிமையான வடிவ அமைப்பும், உள்ளதை உள்ளபடி சொல்லி நகரும் அதன் போக்கும் பலரையும் ஈர்த்துள்ளது என்பதே உண்மை.

இக்கட்டுரைகளின் வாயிலாக, அக்கவிதை வடிவின் பண்புகள், இயல்புகள் குறித்தும், உலகளாவிய கவிஞர்கள் சிலரின் கவிதைகளையும் கண்டோம்.

ஹைக்கூவை நன்கு நிதானித்து, உணர்ந்து, அனுபவித்து எழுதுங்கள்..

வலிந்து உண்மைக்கு புறம்பானவற்றை திணிக்க முயற்சிக்காதீர்கள்.

ஹைக்கூவின் பிதாமகன் பாஷோ அவர்கள் கூறியதையே மீண்டும் உங்களுக்கு நினைவு படுத்துகிறேன்.

ஒரு கவிதையை நீங்கள் உங்கள் வாழ்நாளில் மிகச் சிறப்பாக படைத்து விட்டால் நீங்கள் ஹைக்கூ கவிஞர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அப்படியெனில் அந்த ஒரு கவிதை எப்படி இருக்கவேண்டும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள இந்த கட்டுரைகள் உங்களுக்கு நல்லதொரு வழியைக் காட்டும் என்பதில் எனக்கு எந்தவொரு சந்தேகமும் இல்லை.

கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக வாரந்தோறும் மிகச்சிறப்பான முறையில் வரவேற்றும், பின்னூட்டமிட்டும் உற்சாகப் படுத்திய உங்கள் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும்.. இக்கட்டுரையை எழுத என்னைக் கேட்டுக் கொண்ட சகோதரி ஜெயசுதா அமிர்தம் குழும நிர்வாகி அவர்களுக்கும்..இக்கட்டுரையைத் தொடர்ந்து தங்கள் குழுமங்களில் வெளியிட ஆதரவு வழங்கிய ஹைக்கூ படர் பார்வை, தமி்ழ் ஹைக்கூ கவிதைகள், ஒரு பட்டாம்பூச்சியும் சில ஹைக்கூக்களும், இலக்கியப் பூந்தோட்டம், இதயத் தளம், உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் போன்ற ஹைக்கூ குழுமங்களுக்கும்..

இதனை தொடர்ந்து இணையதளத்தில் வெளியிட்டு சிறப்பித்த நண்பர்கள் சிலருண்டு.  அதில் மிக முக்கியமானவர் தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள். அவரது தமிழ்நெஞ்சம் இணையத்தில் தொடர்ந்து கட்டுரையாக வெளியிட்டு சிறப்பித்தார். அவருக்கும் எனதினிய நன்றி.

இக்கட்டுரை முழுவடிவம் பெற எனக்கு உதவிய ஹைக்கூ கவிஞர்கள், கட்டுரையாளர்கள், இணையம், ஹைக்கூ கவிதை நூல்கள் அனைத்திற்கும் எனதினிய நன்றி.

அவ்வப்போது தட்டச்சு செய்கையில் ஏற்படும் பிழைகளை உடனே சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ள உதவிய நண்பர்கள் அன்பழகன் ஜி, வாபிரா வபி

ஆகியோருக்கும் எனதினிய நன்றி.

விரைவில், நூலாக்கம் பெறும் போது இன்னும் கூடுதலான சில விபரங்களையும் இதில் சேர்க்க எண்ணியுள்ளேன்.

நன்றி.. வணக்கம்.

நிறைவு

முன் பதிவு 59


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

மின்னிதழ்

நிறைய சிந்தியுங்கள் ஹைக்கூ பிறக்கும்

ஹைக்கூ கவிதைகள் எப்படி இருக்க வேண்டும் என்பதில் குழப்பம் வருவதில் அர்த்தமில்லை அவசியமில்லை தேவையுமில்லை. வாழ்ந்த ஹைக்கூ முன்னோடிகள் கவிக்கோ அப்துல் ரகுமான் தி. லிலாவதி, கவிஞர் மித்ரா, நிர்மலா சுரேஷ் போன்றவர்களின் கவிதை களைப் பாடமாக படியுங்கள். நாம் வாழும் காலத்தில் இருக்கின்ற தமிழக மூத்தக் கவிஞர்கள் கவிஞர் அமுதபாரதி கவிஞர் ஈரோடு தமிழன்பன் கவிஞர் அறிவுமதி கவிச்சுடர் கா. ந. கல்யாண சுந்தரம் கவிஞர் அமரன் கவிஞர் வே. புகழேந்தி கவிஞர் அனுராஜ் கவிஞர் இளையபாரதி கந்தகம் பூக்கள் இவர்களின் கவிதைகளைப் படித்து நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.