ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!

நற்கொள்கை வகுக்காமல் அணியில் கூட்டலும் கழித்தலும் அன்றாடம் நிகழ்தலின் உச்சம்! சொத்துக்களைக் குவித்தலும் பெருக்கலுமே குறிக்கோளாய் அரசியலார் கொண்டிருக்கும் அவலநிலை ! காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும் அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க… உழைப்புகளால் கேள்விக்குறியாய் முதுகு வளைந்த மக்களோ… ஆச்சரியக்குறியாய் விழிபிதுங்க நிர்பந்த அடைப்புக்குறிகளுக்குள் தள்ளப்பட்டனர்..! அடடா …. மேற்கோள்கள் அற்ற கட்டுரைபோல் வெறுமனே தமிழின மக்கள் தினம் தினம் போராடித் தோற்றுக் கொண்டிருக்கின்றனர்… ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு !…

அன்பிற்கு அடிமை ஆண்மகன்.!!!

ஆண்மகன் பிறந்தாலே அளவற்ற
மகிழ்ச்சி அனைவரின் வாழ்விலும். !!!

பிள்ளையை கரையேற்றுவதில் தந்தைக்குதான்
எவ்வளவு பாசம்.

கல்விக்கடனுக்காக கையேந்தி நிற்கிறாரே
ஏன் பிள்ளைகளின் வாழ்விற்கா? பாசத்திற்கா?
இருண்டோடும் சேர்த்து தன் கடமை எனும் சொல்லுக்கு. !!!

தங்கையும் கண்ணியமாய் காத்து கிடக்கிறாள்
அண்ணன் கரம்பிடித்து தரும் வரனுக்காக.

தம்பியும் கல்வியை கையில் ஏந்தி
தத்தளிக்கின்றான் அண்ணனின் பணத்திற்காக.

செக்குச் சீமாட்டி!

      கொக்காட்டிக் கொலுசாட்டிக் கொஞ்சிக் கொச்சனை நீராட்டி … கொப்பாட்டிக் குலையாட்டிக் கொத்துக் கொத்தாய் கொழுநீர் வடித்து கொண்டெனையிழுத்து வந்த கொம்மையே … நரையேறி நலிவேறி நடுக்கேறி நட்டோரும் உதறி நரங்கேறி நளதேறி நன்னிச் சுருங்கிய நனவேறி நழுவிப் பின் நீ நயம் தேடுமுன் சீத்தாட்டிச் சீமையேற்றி சீர்ப்போடுனை சீமாட்டி சீரூட்டிச் சிரிப்பூட்டி சீயாளாக்கியுனை சிறப்பாக்கி சீமத்துச் சீமந்தினியாய் … சீதேவியாய் வனப்பாக்கி … பட்ட கடன் பங்கெடுத்து Read more

ஞானமெது..?

இனிப்பானதொன்றை கசப்பாக்கினான் இல்லாத ஒன்றுக்கு இருப்பதின் கருவறுத்து கல்லாத கயவன் போலே கண்ணிருந்தும் குருடானான் .. !! உள்ளுக்குள் வெறும் பாலை மணல் ஊருக்கு மட்டும் பலமுதிர்ச்சோலையாய் சொல்லுக்குச்சொல் தூயோர் சொல் மறைத்து சுயநலப் பகைக்கு சூத்திரம் போதித்தான் .. !! உன்மதம் என்மதம் உன் நாடு என் நாடு உன் குலம் என் குலமெனும் அங்குல மங்குல மந்திரமதை ஆணியாய் உள்ளிறக்கித் தணியாத தாகம் தீரத் தன் இன Read more

உருவமான உயிர்

பருவ மழையில் என் பரம்பரை துளிர்க்கிறதா… பருவம் கொப்பு மாற, பெண்மை பூரணம் உணர்கிறது… இனி, இனிமை மட்டுமே இவள் உலகில்… அந்தத் திரவம் உருவம் ஆகிற்றோ … முந்தானை பிடித்திழுக்க முயல் குட்டியா… நானாகச் சிரிக்கின்றேன், அசையாமல் குதிக்கின்றேன்… கண்ணாடியில் முகம் பார்த்தது போய், முதன் முதலாய் வயிறு… என் பரம்பரையின் இன்னொரு பருக்கையா இது… கட்டிலை நகரச் சொல்லி, ஒற்றைக் காலில் தொட்டில்! உன்னைச் சுமக்க, உனக்காகச் Read more

அன்புத் தோழி

நிறத்தைப் போலவே மனமும் வெள்ளை என்றவளே! – அதில் கரும்புள்ளியை வைத்துவிட்டு எங்கே சென்றாய்? தேனினும் இனிமை குரல் என்றவளே! அதைக் கசப்பாக்கிவிட்டு எங்கே சென்றாய்? பாலினும் தூய்மை குணம் என்றவளே! -அதைத் திரியவைத்துவிட்டு எங்கே சென்றாய்? கண்கள் கலங்கிய போதெல்லாம் என்னைவிட உன்கைகள் என்கண்களைத் துடைத்தனவே! இன்றும் கலங்குகிறேன் உன்கைகளுக்காக ஏங்குகிறேன்! துவண்டபோது எல்லாம் தோள்கொடுத்துத் தூக்கியவளே! இன்றும் துவளுகிறேன் ஊன்றுகோலாய் நீ எங்கே? இனியொரு பிறவி வேண்டும்! Read more

மெய்யும் பொய்யும்

தையும் மார்கழியும் மாறி மாறி, வயதுகள் நெய்யும். தாயும் ‘ஆ’ வும் பருகத் தர, காயும் கனியும். கனியக் கனிய இளமைப் பழங்களை, காலம் கொய்யும். முன் பாதியில் நிலா காயும், பின்னரது தேயும். கவலைக் காயம் காயும், மீண்டும் கனிந்து காயும். முதுமைத் தீயும் பரவும், அது மெய்யை மேயும். சுறுட்டப் படா பாயும் சொல் கேளா நோயும் கண்டு, உயிர் மாயும். தோலோடு சொத்தும் சுருங்கும், ஆயிரம் Read more

அம்மா…!

மனதிற்குள் ஒருமாபெரும் கேள்வி: மங்காத ஒளியாக, அணையாத நெருப்பாக, களையாத மேகமாக, ஓயாத அலையாக, நிற்காத தென்றலாக, மறையாத சூரியனாக, தேயாத பிறையாக, தீராத தாகமாக, நிறையாத பசியாக, வாடாத மலராக, வற்றாத ஆறாக, வடியாத கடலாக, கொட்டாத அருவியாக, குளிராத வசந்தமாக, சுவாசமில்லாத மூச்சாக, நேசமில்லாத மனதாக, உறக்கமில்லாத விழிகளாக , விழிப்பில்லாத விடியல்களாக! இன்னும் இன்னும் …. படைத்தவனைக் காணவேண்டும்! ஐந்துவயதில் உள்மனதில் உருவானது! அவ்வப்போது தலைதூக்கும், Read more

புதுமைப்பெண்

அரசுப்பொதுத் தேர்வில் மாணவிகள் முதலிடம்! ஆசிட் வீச்சில் மாணவிகள் மரணம்! பலகலை நிகழ்ச்சிகளில் மாணவிகள் முதலிடம்! ஒருதலைக் காதலால் மாணவிக்கு அரிவாள்வெட்டு! விண்வெளியை ஆராய்ந்திட விரைகிறார்கள் பெண்கள்! பாலியல் பலாத்காரத்தால் பலியாகிறார்கள் பெண்கள்! மாதவம்செய்து மங்கையராய்ப் பிறந்தால் சேதாரமாக்கிச் சிதையில் சேர்க்கிறார்கள்! நேர்கொண்ட பார்வைகள் குருடாகிப் போகின்றன, வரதட்சனைக் கொடுமையெனும் கூர்வாள்களால்! நிமிர்ந்த நன்நடைகள் முடங்கிப் போகின்றன, மதங்களெனும் பிரிவினை ஆயுதங்களால்! பெண்விடுதலை பெற்றுள்ளோம், நீதிகேட்டு வழக்கில் உள்ளது சுதந்திரம் Read more