கடலோரத் தென்னை மரம்

(எண்சீர் விருத்தம்) கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல்         களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை! தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய்         தன்னிழகை ஒத்தவளை தலைவணங்க வாராய்! வெண்மேகம் உருவாக உன்பங்கும் உண்டோ         வெள்ளியெனத் துள்ளிவரும் வான்துளியின் தாய்;யார்? மண்மீது தவழ்ந்தாடும் மலைக்காற்றும் சேரும்         மனங்குளிரத் தென்றலுனைத் தாலாட்டிப் பாடும்! Read more

பள்ளி பயிற்றுவித்த பாடம்

பதினைந்து வயதினிலே         பலகனவு எனக்குண்டு, உதிரமது ஊறுகின்ற         உன்னதத்தின் காலமது, எதுவுமில்லை உண்பதற்கு         எப்படியூறும் உதிரம்தான், விதியென்றே பள்ளியிலே         விளையாட மனமுமில்லை. கட்டணத்தில் படிக்கின்ற         காலமொன்று இருந்ததாலே எட்டாவது மாதத்திலே         எனக்குக்கட்ட பணமுமில்லை, சட்டப்படி பள்ளியிலே Read more

மாத்திரையின் பிடியில் மன்பதை

மரத்தால் உயிர்வாழும் காலமாறி         மாத்திரையால் வாழுகிற காலமாச்சே. உரத்தால் விளைகின்ற பயிர்மாறி         உருக்குலைந்த வயலாக உருவாச்சே. உணவையே மருந்தாக உண்கையிலே         உடலாயுள் கூடியது உண்மைதான், உணவுக்குப் பதிலாக உயிரழிக்க         உருவாக்கும் மருந்திங்கு வந்தாச்சே. மன்பதையின் ஆயுளிங்குக் கூடக்கூட         மருந்துகளின் எண்ணிக்கைக் கூடுதலாம், Read more

எண்ணெய் இல்லாத் தலையிலும் ஈர்ப்பு

எண்ணெய்யிலா தலையெனினும் ஈர்ப்பு இருக்குது; நல்ல இளமை சிரிக்குது; கண்கள் பார்க்கத் துடிக்குது; முகமோ பழக அழைக்குது; இதழ்கள் பருக விரும்புது. வறண்டுபோன முடியெனினும் வனப்பைக் காட்டுது; புது வசந்தம் கூட்டுது; எழில் வடிவம் பேசுது; விழிகள் காணக் கூசுது; மயக்கம் கண்ணில் தெரியுது. கறுப்புநிற முகமெனினும் கவிதைப் பாடுது; இளமை கருத்தில் ஆடுது; கவர்ச்சி சிந்தைக் கலக்குது; அழகு சிரசில் நிலைக்குது; கன்னம் கவர்ந்து இழுக்குது. அலங்காரம் இல்லையெனினும் Read more

அன்பின் அகலிகை

தலைவிரி கோலம் கையில் செல்போன் நவீன கண்ணகி. அழுகைக்குப் பதில் ஆனந்த சிரிப்பு புதுமை மாதவி. கவர்கின்ற உடையில் கச்சித உடம்பு காண்கின்ற ரதி. சாலையின் ஓரத்தில் சஞ்சலத்தில் பெண் பேசா சாவித்திரி. கணவனைத் தேடி காட்டுக்கு வந்த பொன்மகள் தமயந்தி. துஷ்யந்தனை மனதில் துயரமாய் எண்ணும் தூய்மைநிறை சகுந்தலை. தீயினுள் புகுந்து கற்பினை விளக்கும் காவிய சீதை. திறந்த கண்களால் திருமுகம் காட்டும் கைபேசி காந்தாரி. ராமனை எண்ணி Read more

திருமதிகள் போற்றுகின்ற திருமகளே வாழியவே!

தங்கமகளாய் பிறந்தெமக்கு         தரணியினைப் புரியவைத்தாய், சிங்கமென நடைபோட         செகமதிலே பிறப்பெடுத்தாய், சங்கத்தமிழ் பயிலபாட         சாலையினைத் தேர்ந்தெடுத்தாய், வங்கக்கடல் அலைபோல         வார்த்தையிலே வளம்சேர்த்தாய். உயர்கல்வி பயில்வதற்கு         ஊர்விட்டு புறமிருந்தாய், பயமின்றி ஏழாண்டு         படிப்பறிவில் சிறந்திருந்தாய், அயர்வின்றி கடுமுழைப்பில் Read more

புனிதப் பயணம்

சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில்       சாரும் புவியின் முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள்       இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே தந்தைஇப் றாஹிம்பாங் கோசை – இந்தத்       தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம் சிந்தையிட் சேருமிறை போதம் – ஆங்குச்       சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம் அரபு நாட்டு Read more

பனிமலையில் பிறந்தவளோ?

பளபளக்கும் பாவையிவள் பாதரசத்தில் குளித்தவளா? படபடக்கும் விழிகளோடு பனிமலையில் பிறந்தவளா? கூந்தலில் மல்லிகையைக் குடியிருக்க வைத்தவளே! காந்தமானக் கண்களிலே கவர்ந்திழுக்கும் கனிச்சுளையே! பாவாடைத் தாவணியில் பருவத்தைக் கட்டிவைத்து பூவாசம் வீசுகின்ற புதுப்பெண்ணும் நீதானோ? கண்ணாடி பார்க்கின்ற கன்னியுந்தன் பார்வையிலே முன்னழகு எல்லாமே முழுமையாய்த் தெரியுதடி! உன்மார்பில் ஊஞ்சலாடும் ஒற்றைமணி ஆரமுமே பெண்பார்க்க சொல்லுதடி பேரழகை அள்ளுதடி. பால்குடத்தில் நீந்திவரும் பனிநிலவாய் நீயிருக்க சேல்விழியின் துணையோடு செகமுழுதும் ஆள்பவளே!

முகத்தொகை

(தரவு கொச்சகக் கலிப்பா) புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட       மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே       அம்மானை யாடிடவே அழகவளும் வந்தாளே. நற்றமிழின் சொல்லோச்சி நனிந்துவரும் நங்கையவள்       பொற்புடைய குணவதியாள் பொறுமைக்கு பெருமையவள் நற்குலத்து உதித்துவந்த நாணிலத்தின் சிறப்பவளே       வற்றாத அன்புடைத்த ஆரணங்கு அவளன்றோ. தமிழ்பூத்த நல்லுலகில் தங்கத்தின் பொலிவெனவே       அமிழ்தூறும் சொல்லாடி அரவணைக்கும் நறுமணமே கமழ்கின்ற பூவையவள் காதலிலே நிறைக்கின்றாள்       இமகரனி ளெம்பேனோ இமையாகி குளிர்ந்தாளே. கண்மணியாள் கவர்ந்திழுக்க காந்தளிதழ் விரலொக்க       விண்மீனாம் கருவிழிகள் விளையாடக் கண்டிடவே பொன்மணியாள் மலர்க்கூந்தல் மகிழாதோ மணம்வீசி       வண்டாடும் குழலியவள் குழையாட ஆடினளே. முன்பனியின் துளிதாங்கி முத்தாக ஒளிர்ந்திடுமே       மென்னிதழின் வண்ணத்தில் செங்கதிரோன் நாணிடவே கன்னிமகள் கனவுகளில் மருதாணி சிவப்பழகாய்       Read more

சிற்றிதழ்கள் உலகம் சரிந்தது!

அஞ்சலி வரம்போடு தம்வாழ்வை     வகுத்தளித்து வாழ்ந்துவந்த பெரம்பலூரில் பிறந்திட்ட     பெருவைரம் இராமதாசு, உரமாக இருந்துவந்து     உயர்வான சிற்றிதழைத் தரமான எழுத்துகளால்     தவழவிட்டு மகிழ்ந்துவந்தார். பெற்றெடுத்த பிள்ளையினும்     பிரியமுடன் வளர்த்துவந்த சிற்றிதழைத் தம்பொறுப்பில்     சிரமங்கள் பலவிடையே, முற்றும்நம் தமிழ்வளர     முனைப்பாக பாடுபட்டு உற்றதுணை யாயிருந்து     உயிரையும் உவந்தளித்தார். துபாயிலவர் Read more