மரபுக் கவிதை
கடலோரத் தென்னை மரம்
(எண்சீர் விருத்தம்) கண்ணாடிப் போலந்த கலங்காத நீர்மேல் களிப்போடு முகம்பார்க்க காலடியில் நீரை! தண்ணீரின் அழகில்நீ தடுமாறிப் போவாய் தன்னிழகை ஒத்தவளை தலைவணங்க வாராய்! வெண்மேகம் உருவாக உன்பங்கும் உண்டோ வெள்ளியெனத் துள்ளிவரும் வான்துளியின் தாய்;யார்? மண்மீது தவழ்ந்தாடும் மலைக்காற்றும் சேரும் மனங்குளிரத் தென்றலுனைத் தாலாட்டிப் பாடும்! Read more
