(தரவு கொச்சகக் கலிப்பா)

புலர்பொழுது சூரியனை புள்ளினங்கள் எழுப்பிவிட
      மலர்முகைகள் மடல்திறந்து மணம்வீசி மகிழ்ந்தாட
செம்முளரி முருக்கவிழ்க்கும் ஞாயிற்றின் வருகையிலே
      அம்மானை யாடிடவே அழகவளும் வந்தாளே.

நற்றமிழின் சொல்லோச்சி நனிந்துவரும் நங்கையவள்
      பொற்புடைய குணவதியாள் பொறுமைக்கு பெருமையவள்
நற்குலத்து உதித்துவந்த நாணிலத்தின் சிறப்பவளே
      வற்றாத அன்புடைத்த ஆரணங்கு அவளன்றோ.

தமிழ்பூத்த நல்லுலகில் தங்கத்தின் பொலிவெனவே
      அமிழ்தூறும் சொல்லாடி அரவணைக்கும் நறுமணமே
கமழ்கின்ற பூவையவள் காதலிலே நிறைக்கின்றாள்
      இமகரனி ளெம்பேனோ இமையாகி குளிர்ந்தாளே.

கண்மணியாள் கவர்ந்திழுக்க காந்தளிதழ் விரலொக்க
      விண்மீனாம் கருவிழிகள் விளையாடக் கண்டிடவே
பொன்மணியாள் மலர்க்கூந்தல் மகிழாதோ மணம்வீசி
      வண்டாடும் குழலியவள் குழையாட ஆடினளே.

முன்பனியின் துளிதாங்கி முத்தாக ஒளிர்ந்திடுமே
      மென்னிதழின் வண்ணத்தில் செங்கதிரோன் நாணிடவே
கன்னிமகள் கனவுகளில் மருதாணி சிவப்பழகாய்
      உன்னழகில் நற்காலை காண்டிடவே வருவாயே.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

மரபுக் கவிதை

அண்ணா

வினைச்சொல்லாய் வேதியத்தின் இருள கற்றி
விடியல்தர வந்துதித்த கதிர வன்நீ!
முனைச்சொல்லாய்க் கூர்படைத்த கூர்ப டைத்துக்
குத்தீட்டிச் சொல்வடித்த உலைக்க ளம்நீ!
பிணைச்சொல்லாய்ப் பிரிந்துபட்ட தமிழி னத்தைப்
பேரினமாய்த் திரளவைத்த பெருந்தி றம்நீ!

 » Read more about: அண்ணா  »