கவிதை
தாய்க்கொரு மடல்
எஜமானின் வீட்டு கனவான்களுக்கு சமைத்துத்தான் கொடுக்கின்றேன் வயிற்றுப் பசியாற்றவும் உடற் பசியாற்றவும் என்னைத்தான் நாடுகின்றான் ஒருவன் மாறி ஒருவன்! செத்துப்போன உடலுக்குள்ளே ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன் கலங்கிவிடாதே தாயே...!
எஜமானின் வீட்டு கனவான்களுக்கு சமைத்துத்தான் கொடுக்கின்றேன் வயிற்றுப் பசியாற்றவும் உடற் பசியாற்றவும் என்னைத்தான் நாடுகின்றான் ஒருவன் மாறி ஒருவன்! செத்துப்போன உடலுக்குள்ளே ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன் கலங்கிவிடாதே தாயே...!
உலவும் தென்றல் குளிரெனவே - என் உள்ளச் சோலையில் பூத்தவளே! இலவு காத்த கிளிபோல எனை ஏங்க வைத்தே சென்ற தெங்கே? பிரிவென் கின்ற புயற்கரத்தால் - உயர் பாசச் சுடரை அணைத்துவிட்டுச் சருகாய் என்றன் வாழ்வதனைத் - தரையில் சரியச் செய்தே சென்றதெங்கே?
நேற்றைய சத்தமோ, நிசப்த நிலையில் நேரும் என்று கொஞ்சமும் நினைத்தும் பார்க்காது; நேசத்தின் தோற்றம் வெறும் ஏமாற்றமாக நேர கால மாற்றத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சியானது ஆசைகள் ஒவ்வொன்றும் ஆற்றோடு அடியுண்டு ஆதரவு தேடிய வெளிச்சமும் அணைந்து இருட்டில் ஆழமும் அறியாமல், போகும் திசையும் தெரியாமல் ஆரவாரம் எல்லாமே அடங்கி ஒடுங்கிய நிலையில் வேண்டும் காட்சிகளை மாற்ற வழி தெரியவில்லையே ...
எழுதி முடித்த கவிதைகளின் முதல் இரசிகனாய் என் பேனா கசங்கியிருந்த காகிதம் பட்டமாகியது கவிதை நூல் வெளியீட்டு விழாவில் காணாமல் போன குழந்தை கிடைத்து விடுகிறது சுவரொட்டிகளில்
அலாரம் அடிக்கு முன்னே
அயராதக் கண்களுடன்
ஆதவன் அவளழகு முகத்தில்
விழித்தே சிரிப்பான் !
தட்டி எழுப்பிய செல்வங்களை
தாமதமாகாமல் பள்ளிக்கு அனுப்பித்
தாரமாகி,
சோகமில்லா மன்னனெவன்? அசோகன் என்பார்! சுடுநெருப்பின் தலைவன்தான் ஞாயிறென்பார்! மேகத்தின் எச்சில்தான் மழையாம்! மதுவை அருந்தாமல் மயங்குவதே மாலை நேரம்! ஊகத்தை மொழிபெயர்த்தால் உண்மை யாமோ உன்னுடைய மொழிபெயர்ப்பே பிள்ளை என்பார்! வேகத்தில் எப்போதும் எழுதிடாமல் விரும்புங்கால் எழுதுகிற கவிஞன் என்பார்!