அன்புள்ள அம்மா …
உன் சுகம், நலம் அறிய …,
அளவிலா ஆவல் எனக்கு – உன்
அன்பு மகள் நான்
பக்கத்தில் இல்லாதபோதும் – நீ …
எப்படி இருக்கின்றாய் தாயே!
உன் பிஞ்சுகளாம் – என்
தம்பியும், இரு தங்கைகளும்
நலமாக உள்ளனரா?
கல்யாணமாகிப்போய்விட்ட
அக்காவும், அண்ணாவும்
வந்து போவதுண்டா?
நீண்ட நாள்களாய் – என்
மடல் காணாத உன் கண்கள்
உறங்கி இருக்காதென்பது
எனக்குத் தெரியும்
மூன்று மாதங்களுக்கொரு முறை
என் பிஞ்சு விரல்கள் வரையும்
காகிதம்தான் உன் மனதுக்கு
அமைதியளிக்கும் என்பதும் தெரியும்!
எழுதவும் கற்றுத் தந்தாய்,
ஒழுக்கமும் ஊட்டிவிட்டாய்
பிணங்களும் பின்னால் அலையும்
பணத்துக்கு வழியில்லாமல்
கடல் கடந்து வந்துவிட்டேன்
கலையிழந்து வாடுகின்றேன்!
அரபு நாட்டு அரக்கர்களின்
அடிமையாகிப் போன பின்னால்
நான் காணும் இன்னல்கள்
எழுத்தினில் அடங்காதம்மா
மனம்விட்டுச் சொல்லிவிட்டால் – நீ
உயிர்விட்டுப் போய்விடுவாய் என்பதனால்
இத்துணை நாளும் மடலே எழுதவில்லை.
இங்கென்றால்
நன்று என்ற சொல்லே
நாறித்தான் கிடக்கிறது!
எஜமானின் அப்பா
இயலாத கிழவன்தான்
நாளும் அவனைக் குளிப்பாட்ட
நான்தான் பலிக்கடாவாம்
குளிப்பாட்டவும் வேண்டும் – உடல்
குளிர, ஆற்றவும் வேண்டும்!
எஜமானின் வீட்டு கனவான்களுக்கு
சமைத்துத்தான் கொடுக்கின்றேன்
வயிற்றுப் பசியாற்றவும்
உடற் பசியாற்றவும்
என்னைத்தான் நாடுகின்றான்
ஒருவன் மாறி ஒருவன்!
செத்துப்போன உடலுக்குள்ளே
ஒரு குற்றுயிராய் வாடுகின்றேன்
கலங்கிவிடாதே தாயே…!
என்றோவொரு நாள்
விடுதலை கிடைத்தால்
வந்து சேருகின்றேன் – உன்னையும்,
உன் பிஞ்சுகளின் முகங்களையும்
இறுதியாக ஒருமுறை பார்த்துவிட …
நீ கற்றுத்தந்த ஒழுக்கத்தை
தெருவிலே விட்டவளாய்…
என்னை மன்னித்துவிடம்மா!!!
உழைப்பாளர்களை உயர்த்துவோம்
I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பாளர்களை உயர்த்துவோம் உழைப்பே என்றும் உயர்வாகும்! உடலை உறுதி ஆக்கிவிடும்! தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே தளரா உழைப்பின் பலனன்றோ! பிழைக்கும் ஏழை உடல்வருத்திப் பெரிதும் உழைப்பர் பசியுடனே! உழைப்போர் நலனைக் காத்திடுவோம்! உதவி செய்தே ஆதரிப்போம்! வயலில் உழைக்கும் விவசாயி வளத்தைச் சேர்க்கும் உழைப்பாளி! அயரா Read more