கவிதை
பட்டுப்போன மரம்
அவள் விதைகளில் உதித்த அவள் செடிகள் ஆற்றாமையின் வலி தெரியாது ஆணவத்துடன் கேலி செய்து கூத்தாடுவது அடடா, இது நியாயமா ?
அவள் விதைகளில் உதித்த அவள் செடிகள் ஆற்றாமையின் வலி தெரியாது ஆணவத்துடன் கேலி செய்து கூத்தாடுவது அடடா, இது நியாயமா ?
தோகைமயில் நடந்தால் போதும் தொப்புள்குழி தெரியவா வேண்டும் ? வாகைப்பூ மலர்ந்தால் போதும் வயிறுமுழுதும் தெரியவா வேண்டும் ?
கன்னத்து குழியழகு கார்மேக முடியழகு வண்ணத்தில் நீ இருக்காய் வானழகு வடிவமடி. எண்ணத்தில் நீ இருக்காய் ஜென்மத்தில் நீ வாழ்வாய்! வில்லழகு நெற்றியிலே பொட்டழகு மின்னுதடி வட்டமிட்ட உன்முகம் பூ அழகு புன்னகையும் எனைக் கிரங்கச் செய்யுதடி!
சந்தேகச் சகதியில் நீ சறுக்கி விழுந்திடாதே ! சகதி சரியாகிவிடும். . சந்தேகமோ .. வாழ்வை .. சருகாக்கி விடும் ..! உள்ளங்கள் இணைவதால் ! உணர்வுகள் உயிர்பெரும் .. கன்னம் சிவந்திட வாழ்வில் களிப்பும் வளம்பெறும் ..!
மருதாணி கொஞ்சம் தடுமாரி - உன் கன்னம் சிவப்பாகிப் போனதோ! மஞ்சல் முக மதியே நீ கண்கள் மறைத்தாய் நீ வெட்கம் நிறமாகி செக்கச்சிவப்பான உன் பொழிவதனை மருதானி கடன் வேண்டுமென்று கன்னம் தழுவாமல் கரங்களில் கவசம் செய்கிறாய்!
மாமியார் உறவினை தாயேன ஏற்றிடும் மக்களில் இன்னுமோர் மகளவள்! - சீதனம் சுமந்தவள் புக்ககம் வருகையில் அகந்தையை செருப்பென மாற்றிடும்நல் குணத்தவள்! சுட்டிடும் வார்த்தைகள் மனதெல்லாம் எரித்தினும் சோகத்தை மறைத்துமே சிரிப்பாள் - கன்னம் வழிந்திடும் நீரினில் காயங்கள் போக்கிடும் வல்லமை படைத்துமே இருப்பாள் !