கவிதை

வைரமுத்தை தோற்கடிப்பேன்…

திணரவைக்கும் திமிராலே
திரும்பி பார்க்க வைத்தாய் நீ
கிறங்கடிக்கும் சிரிப்பாலே
விரும்பிப் பார்க்க வைத்தாய் நீ

உன் சின்னஞ்சின்னஞ் சிணுங்களிலே
இளையராஜா இசை கேட்டேன்
கொஞ்சி கொஞ்சி நீபேச
கவிதை கோடி நான் கோர்த்தேன்

மாசி மாத காற்றைப்போல்
மனசுக்குள்ளே நீ வீசு
உன்னை எண்ணி உயிர்த்தேனே
ஒற்றை வார்த்தை நீ பேசு

வாசப் பூவே நீ கேட்டால்
வானில்கூட பூப்பறிப்பேன்
வாழ்வின் பொருளே உனக்காக
வைரமுத்தை தோற்கடிப்பேன்

சாடையாலே நீ சொன்னால்
சாவைகூட சாகடிப்பேன்
கைகள் கோர்க்க நீ வந்தால்
காலின் கொலுசாய் நானிருப்பேன்

 » Read more about: வைரமுத்தை தோற்கடிப்பேன்…  »

கவிதை

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன்
வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே !
பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன்
பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே !

அலங்கார நடைபோடும் தேவதையே –

 » Read more about: அம்மனைத் தேடும் அழகுரதம்  »

கவிதை

வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு
என்நெஞ்சில் வந்தவன்
திருமகன் என்று வருவான்

கார்கொண்ட வண்ணமும்
கனியிதழ் வாய்கொண்டு
கனிமுத்தம் என்று தருவான்

நேர்கொண்ட வீரமும்
கொடை அன்புகொண்டவன்
நிம்மதி என்று தருவான்

போர்கொண்ட வேங்கையாய்
புறங்காணா வேந்தனாய்
புலியாக வாழும் வீீரன்

சீர்கொண்டு வருவானோ
சிலையாநான் வாடி
சிந்தையில் அவனை வைத்தேன்

பார்வென்று தார்மாலை
சூடிவரும் போதிலே
பரிசொன்று நான் சூடுவேன்

 » Read more about: வேங்கையாய் வீரனாய் வருவான்  »

கவிதை

அன்புள்ள நண்பிக்கு

அன்பெனும் சொல்லுக்கு
அகராதியை விஞ்சிய
அர்த்தம் நீ …

உன் கைப்பிடி அழுத்தங்கள்
உதிர்ந்து போன நாட்களை
உயிர்ப்பித்து தந்தது….

தலை வருடிய சுகம்
தாயினன்பை என்னுள்
தடவிச் சென்றது…

 » Read more about: அன்புள்ள நண்பிக்கு  »

கவிதை

அக்னிச்சிறகு

அப்துல் கலாம்
இந்தியத் தாயின் முகம்.
இந்தியாவின் முகவரி.
நம் நாட்டின்
வடக்கே இமயமலை
கிழக்கே அப்துல் கலாம்.

நடமாடிய விஞ்ஞானம்
தந்தை தெரஸா
இந்தியாவின் ரியல்
சூப்பர் ஸ்டார்.

 » Read more about: அக்னிச்சிறகு  »

கவிதை

வாலிபக் கவிஞர் வாலி

( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! )

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன்
தமிழரை கலங்க வைத்தான் இன்றோ
நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் !

 » Read more about: வாலிபக் கவிஞர் வாலி  »

கவிதை

வாலி நீ வாழி!

நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை
பாக்குச் சுண்ணாம்புடன்
நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்!

ஒற்றை வரிகளில்
ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப்
பாக்களில் புதைத்தவனின்
உடல்தான் புதைக்கவோ
எரிக்கவோப் பட்டிருக்கலாம்;

 » Read more about: வாலி நீ வாழி!  »

கவிதை

குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்

இரை தேடி சென்ற குருவிகள் கூட்டையும்
மரங்கொத்தி பறவையின் அலகு நுனியின் அழுத்தத்தையும்
எறும்புகள் ஊர்ந்த வழியையும்
நிழலுக்காக ஒதுங்கிய மனிதனின் ஏக்கத்தையும்
நூற்றாண்டுகளுக்கு மேல்
பிரசவித்த கோடி இலைகளையும்
லட்சம் மலர்களின் வாசங்களையும்
காய் கனிகளின் சுவைகளையும்
மண் சுமக்கயிருந்த சருகுகளுக்கான கனவுகளையும்
அந்நிலத்தின் வெற்றிடத்தையும்
மரத்தை வெட்டி சாய்த்த மரவெட்டியவனின் வேர்வையையும்தான்
உங்கள் வீட்டு முற்றத்தில் நாற்காலியாய் கிடத்தி
கோப்பையில் ஏதையோ நிரப்பி அருந்தி கொண்டிருக்கிறீர்கள்
அவையனைத்தும் என்னை நோக்கி அமர்ந்திருப்பதை
கவனிக்காதிருக்கிறீர்கள்
கவனிக்காதவரை குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்…

 » Read more about: குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்  »

கவிதை

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில்,
ஆணவம் அழிந்து
இன்பம் பிறக்கிறது!

அன்பை உணர்கையில்,
உலகமே சிறுத்து
உள்ளங்கை பந்தாய்!

அன்பை சுவாசிக்கையில்,
மண்ணை நேசித்து
பெண்மையும் சிறக்குதே!

 » Read more about: அன்பினால் …  »