வைரமுத்தை தோற்கடிப்பேன்…

திணரவைக்கும் திமிராலே திரும்பி பார்க்க வைத்தாய் நீ கிறங்கடிக்கும் சிரிப்பாலே விரும்பிப் பார்க்க வைத்தாய் நீ உன் சின்னஞ்சின்னஞ் சிணுங்களிலே இளையராஜா இசை கேட்டேன் கொஞ்சி கொஞ்சி நீபேச கவிதை கோடி நான் கோர்த்தேன் மாசி மாத காற்றைப்போல் மனசுக்குள்ளே நீ வீசு உன்னை எண்ணி உயிர்த்தேனே ஒற்றை வார்த்தை நீ பேசு வாசப் பூவே நீ கேட்டால் வானில்கூட பூப்பறிப்பேன் வாழ்வின் பொருளே உனக்காக வைரமுத்தை தோற்கடிப்பேன் சாடையாலே Read more

அம்மனைத் தேடும் அழகுரதம்

வெள்ளிக்குடம் சுமந்துவரும் தங்கரதமே – உந்தன் வேண்டுதலும் நிறைவேறும் பொன்னுரங்கமே ! பால்குடத்தை எடுத்துவரும் தேனருவியே – உந்தன் பாவங்கள் போக்கிவிடும் தேவியருளே ! அலங்கார நடைபோடும் தேவதையே – உந்தன் அருகினிலே வந்தமரும் சேவடியே ! பலங்காலப் பக்தியிலே அடியவளே – உந்தன் பக்தியினை மெச்சாவிடில் கொடியவளே ! பூமிக்கும் வலிக்காமல் நடப்பவளே – உந்தன் பூவிரல்கள் மலராக்கிக் கடப்பவளே ! சாமிக்கும் உனைக்காண அருள்வருமே – உந்தன் Read more

தன்னலமிலா மனமுடையோர் …

எண்சீர் விருத்தம் (மரபுப் பா) ————————————- விளம் – விளம் – மா – தேமா விளம் – விளம் – மா – தேமா துன்பமோ பிறர்க்கிலா தாகு மாயின் …… துயரமோ வெனக்கிலை யென்று நெஞ்சம் இன்பமே கொள்ளுமோர் மாந்தர் தம்மின் …… இதயத் துள்ளொளி பெருகித் தானும் தன்னல மிலாதநல் குணத்தா லிங்கே …… தாரணி யிதுவுமு யருமா மன்றோ இன்னுயிர் நீத்திடற் பின்னும் நாமம் Read more

வேங்கையாய் வீரனாய் வருவான்

தேரேறி வில்கொண்டு என்நெஞ்சில் வந்தவன் திருமகன் என்று வருவான் கார்கொண்ட வண்ணமும் கனியிதழ் வாய்கொண்டு கனிமுத்தம் என்று தருவான் நேர்கொண்ட வீரமும் கொடை அன்புகொண்டவன் நிம்மதி என்று தருவான் போர்கொண்ட வேங்கையாய் புறங்காணா வேந்தனாய் புலியாக வாழும் வீீரன் சீர்கொண்டு வருவானோ சிலையாநான் வாடி சிந்தையில் அவனை வைத்தேன் பார்வென்று தார்மாலை சூடிவரும் போதிலே பரிசொன்று நான் சூடுவேன்

அன்புள்ள நண்பிக்கு

அன்பெனும் சொல்லுக்கு அகராதியை விஞ்சிய அர்த்தம் நீ … உன் கைப்பிடி அழுத்தங்கள் உதிர்ந்து போன நாட்களை உயிர்ப்பித்து தந்தது…. தலை வருடிய சுகம் தாயினன்பை என்னுள் தடவிச் சென்றது… நூற்றாண்டு கால நட்பை நொடிப் பொழுதுகளில் தந்த மாயக்காரி நீ… அன்பான கவனிப்பு ஆறுதலான வார்த்தைகள் அறிவான பேச்சு… உன்னில் வியக்க ஏராளம்!தாராளம்! மொத்தமாகவும் சில்லறையாகவும் உன் அன்பு எனக்கு மட்டுமே கிடைத்திட வேண்டும்! அன்பில் நானோர் பேராசைக்காரி! Read more

அக்னிச்சிறகு

அப்துல் கலாம் இந்தியத் தாயின் முகம். இந்தியாவின் முகவரி. நம் நாட்டின் வடக்கே இமயமலை கிழக்கே அப்துல் கலாம். நடமாடிய விஞ்ஞானம் தந்தை தெரஸா இந்தியாவின் ரியல் சூப்பர் ஸ்டார். இந்தியாவை தலைநிமிரச் செய்த இமயத் தமிழன். மனித நேயம் மிக்க மகத்துவ தேசத்தை மண்ணில் சமைக்க சுற்றிச் சுழன்ற மனிதத் தேனி. அவர் உள்ளத்தில் முளைத்த ஏவுகணை விண்ணைத் துளைத்தது. நெருப்பை – இளைஞர்களின் நெஞ்சங்களில் ஏற்றிய நெம்புகோல். Read more

வாலிபக் கவிஞர் வாலி

( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! ) தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன் தமிழரை கலங்க வைத்தான் இன்றோ நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் ! கவிதை உலகின் காவியத் தலைவன் அன்னை தமிழின் அழியாக் கவிஞன் ! உடலால் மறைந்து உள்ளத்தில் நிறைந்தவன் உலகத் தமிழர் நெஞ்சினில் நிலைத்தவன் ! வாய்மையுடன் வாழ்ந்த வாலிபக் கவிஞன் உள்ளத் தூய்மையால் உயர்ந்த Read more

வாலி நீ வாழி!

நாக்குவழித்து நற்சுவை வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புடன் நாக்குவழியாய் நற்றமிழ்ப் பாடியவன்! ஒற்றை வரிகளில் ஓராயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிப் பாக்களில் புதைத்தவனின் உடல்தான் புதைக்கவோ எரிக்கவோப் பட்டிருக்கலாம்; ஆனால் அவனின் பாக்களைப் புதைக்கவோ எரிக்கவோ இயலா. செக்கச் சிவந்த மேனி; மிக்கச் சிறந்த ஞானி மரபுக்குள் கட்டுண்டவன்; புதுமைக்குள் புகுந்து விளையாடியவன் வண்ணதமிழிலும் செய்யுள் வனைந்தான்; வாலிபத் தமிழிலும் வாலிபால் விளையாடினான்! மீனைத் தொடாத வகுப்பில் பிறந்தவனோ, “நேற்று வைத்த மீன் Read more

குற்றவுணர்வின்றிக் குடியிருங்கள்

இரை தேடி சென்ற குருவிகள் கூட்டையும் மரங்கொத்தி பறவையின் அலகு நுனியின் அழுத்தத்தையும் எறும்புகள் ஊர்ந்த வழியையும் நிழலுக்காக ஒதுங்கிய மனிதனின் ஏக்கத்தையும் நூற்றாண்டுகளுக்கு மேல் பிரசவித்த கோடி இலைகளையும் லட்சம் மலர்களின் வாசங்களையும் காய் கனிகளின் சுவைகளையும் மண் சுமக்கயிருந்த சருகுகளுக்கான கனவுகளையும் அந்நிலத்தின் வெற்றிடத்தையும் மரத்தை வெட்டி சாய்த்த மரவெட்டியவனின் வேர்வையையும்தான் உங்கள் வீட்டு முற்றத்தில் நாற்காலியாய் கிடத்தி கோப்பையில் ஏதையோ நிரப்பி அருந்தி கொண்டிருக்கிறீர்கள் அவையனைத்தும் Read more

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில், ஆணவம் அழிந்து இன்பம் பிறக்கிறது! அன்பை உணர்கையில், உலகமே சிறுத்து உள்ளங்கை பந்தாய்! அன்பை சுவாசிக்கையில், மண்ணை நேசித்து பெண்மையும் சிறக்குதே! அன்பு சுற்றிவளைக்கையில், ஆனந்த ஊற்றாய் இல்லம் திகழ்ந்திடுமே! இருள் ஒழிந்து, ஆகாயம் வெளுப்பதால் – வாழ்க்கை அன்பினால் …!