அன்பெனும் சொல்லுக்கு
அகராதியை விஞ்சிய
அர்த்தம் நீ …
உன் கைப்பிடி அழுத்தங்கள்
உதிர்ந்து போன நாட்களை
உயிர்ப்பித்து தந்தது….
தலை வருடிய சுகம்
தாயினன்பை என்னுள்
தடவிச் சென்றது…
நூற்றாண்டு கால
நட்பை நொடிப்
பொழுதுகளில் தந்த
மாயக்காரி நீ…
அன்பான கவனிப்பு
ஆறுதலான வார்த்தைகள்
அறிவான பேச்சு…
உன்னில் வியக்க
ஏராளம்!தாராளம்!
மொத்தமாகவும்
சில்லறையாகவும் உன் அன்பு
எனக்கு மட்டுமே கிடைத்திட
வேண்டும்!
அன்பில் நானோர் பேராசைக்காரி!
எனக்கென்றால்…..
சரியான நேரத்தில்
சரியாக கிடைத்த
சன்மானம் நீ…
மீண்டும் வருவேன்…
முடியாத கதைகள் பேசி
முழுவதுமாய் என்னை நீ
மூழ்கடித்த உன் அன்புக் கடலில்
முத்துக் குளிக்க
மீண்டும் வருவேன்..
இறைவன் நாடினால்…