( மறைந்த மாபெரும் கவிஞனுக்கு கண்ணீர் அஞ்சலி ! )

தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை
தண்ணீரில் பிழைக்க வைத்தான் என்றவன்
தமிழரை கலங்க வைத்தான் இன்றோ
நம்மை கண்ணீரில் மிதக்க வைத்தான் !

கவிதை உலகின் காவியத் தலைவன்
அன்னை தமிழின் அழியாக் கவிஞன் !
உடலால் மறைந்து உள்ளத்தில் நிறைந்தவன்
உலகத் தமிழர் நெஞ்சினில் நிலைத்தவன் !

வாய்மையுடன் வாழ்ந்த வாலிபக் கவிஞன்
உள்ளத் தூய்மையால் உயர்ந்த கவிஞன் !
கொள்கைத் தவறா கொற்றவனே வாலி
கொட்டினாலும் தட்டிகொடுப்பவனே வாலி !

கவிஞர் உலகத்தின் அவதாரப் புருஷன் நீ
வாடாத மலர்களாய் நினைவு நாடாக்கள் நீ !
பாண்டவர் பூமியால் தமிழர்களை ஆண்டவன் நீ
கலைஞர் காவியம் படைத்த காவிய நாயகன் நீ !

மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா
கண்போன போக்கிலே கால் போகலாமா…
என்றெல்லாம் சொன்னவனே எங்கேநீ சென்றாயோ
எண்ணத்தின் வலிகளை எழுத்தாக்கிய வாலியே !

வலிவிழந்தாலும் பொலிவில் குறையாதவனே
வழியிருந்தும் வாய்ப்பைத் தேடி ஓடாதவனே !
இளையத் தலைமுறைக்கு வழிவிட்டவ்னே
உள்ளக் களிப்புடன் ஊக்கம் அளித்தவனே !

மறக்கவும் முடியாது உங்கள் பாடல்களை
பிறக்கவும் இல்லை உங்களக்கு இணையாக !
கேட்டிடுவோம் உங்கள்குரலை ஊடகங்களில்
தட்டி எழுப்பிடும் தமிழர் இதயங்களை என்றும் !

ஒலிக்கும் உன்பாடல்கேட்டு உள்ளங்கள் அழுதிடும்
ஓய்வெடுக்க சென்ற உனை நினைந்து உருகிடும் !
உன்னை வாழ்த்திப் பாடுகிறோம் நீ வரவேண்டும்
உன் நினைவோடு வாழ்வோம் நாங்களும் என்றும் !


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 13

ஹைக்கூ திண்ணை செப்டம்பர் / ஒக்டோபர் மின்னிதழைத் தொகுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன். இந்தப் பெறுமதியான வாய்ப்பை வழங்கிய கவிச்சுடர் கல்யாணசுந்தரம் ஐயா அவர்களுக்கு முதற்கண் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஹைக்கூ என்றால் என்ன, அதை விளங்கிக் கொண்டு அதன் விதிமுறைகள் பற்றி அறிந்து அதன்படி எழுத எல்லோரும் முனைகின்றார்களா என்பது கேள்விக்குறியே. சிலர் இலக்கண விதிமுறைக்கேற்ப ஹைக்கூ கவிதைகளை எழுதுகின்றனர். ஆனாலும் சிலர் இலக்கண விதிகளைக் கொஞ்சம் மீறிப் புதுமையாக, வித்தியாசமாக எழுதுபவர்களாக இருக்கிறார்கள்...