புதுக் கவிதை
உயிர் ஊசலில் விளைநிலம்
விதைத்த விதைகளை உள்வாங்க
என் உடலில் உயிர்சத்து இல்லை.
விதைகளை முளைக்கச்சொல்ல
என்மனதில் ஈரமில்லை.
வெற்றிடங்களை நிரப்ப
வருணபகவானுக்கோ மனமில்லை.
கண்விழித்துப்பார்த்தால்
வெள்ளைமாளிகைகள் நாற்காலி
போட்டு அமர்ந்து அதிகாரம் செய்கிறது.