தம்பி… அறிமுகம்
பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.
பேச்சில் தமிழே உயர்வாக
பிறந்தேன் தஞ்சை மாவட்டம்.
மூச்சில் முழக்கம் தமிழாக.
முயன்றேன் கற்க இலக்கணமே.
வீச்சில் தமிழே உரையாக
வீறு கொள்வேன் கவியரங்கம்.
தீச்சொல் தவிர்த்துத் திறமுடனே
தேன்த மிழையே பரப்பிடுவேன்.
காப்பு பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால் சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய் உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட உன்னருளை வேண்டுகி றேன்! நூல் அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில் வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே – திண்ணமாய் நுண்ணறிவில் நீபடைத்தாய் நுட்பமாய் உன்னருள் வெண்மேகம் போன்றது வே. (1) வேண்டுமே வேண்டாவே வேண்டுதல் யாவையும் ஆண்டோன் உனக்கே அதிகாரம் – வேண்டினால் நீண்டிடும் நின்றிடா நின்னருள் வேண்டலால் கேண்மையும் தந்திடுவாய் Read more
(கட்டளைக் கலித்துறை) பாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே பாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே மாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன் பாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே! (1) பாவலன் என்றுனைப் பாமர மக்களின் பார்வியக்கத் தேமது ரம்போல் புனைந்தாய் கவிகளைச் சீருடனே நாமெலாம் கூடியே நாட்டி (ன்) அடிமை நலிவகற்றக் கோமக! வீரம் நீயெம் குருதியில் குழைத்தனையே! Read more
நேரிசை வெண்பா வகை வண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை வண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய் எண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே விண்ணுலகம் போற்றும் வியந்து வண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும் வண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே விண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை விண்ணுலகம் போற்றும் வியந்து எண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும் எண்ணியே நண்ணுக ஏந்திழை – எண்ணமே விண்ணதி லேயொளிர் வெண்ணிலா போலென விண்ணுலகம் போற்றும் வியந்து Read more
கம்பன் வடித்தநற் காவியம் கேட்டாலே வம்பன் எனினும் வசப்படுவர்! – செம்பொன் நிகர்த்த கவிதைகள் நெஞ்சுழள இனிக்க விகர்ப்பம் தணியும் விரைந்து! விஞ்சும் தமிழால் வியந்திடச் செய்தவர்! நெஞ்சும் உரைக்கும் நினைவாளர் – அஞ்சாதே கம்பன் இருக்கக் கவலைகள் தாம்எதற்கு?! செம்பட்டுப் போன்றே செழிப்பு! மனத்தின் அவலம் குறைக்கவே அஞ்சும் கொஞ்சும் தமிழைக் குவித்தவர்! – நெஞ்சும் சுவைக்கும் பொருளைச் சுரந்தவர் கம்பர்! அவைக்கும் அவரே அழகு! உயிர்கொடுத்த பாவலர் கம்பரே பாட்டால் Read more
தித்திக்கும் தேன்மழைதான் தேடியின்பம் பெற்றிடுவீர்! எத்திக்கும் காத்தருளும் ஏழ்பிறப்பும்! – முத்தாம் திருப்புகழுக் கொப்பான தேதுமில்லை! வாழ்வில் உருப்பெற்று வாழும் உயிர்! சிங்காரத் தண்டமிழின் சீர்கண்டு மெய்சிலிர்க்கும்! மங்காத வாழ்வளிக்கும் மண்மணக்கும்! – தங்கத் திருப்புகழால் சிந்தைக்குள் தேன்பாயும்! நாளும் பெருக்கெடுக்கும் நல்லின்பப் பேறு ! செந்தமிழ்க் காவலனைச் சிந்தையுள் வைத்துப்பா முந்துதுவே இன்பத்துள் மூழ்கடித்து! – கந்தன் அருள்பெற்று வாழ அனுதினம் பாடு! திருப்புகழால் தீரும் துயர் ! Read more
பாரதியார் போலிங்குப் பாரினிலே கண்டதில்லை வீரத்தில் யாமறிந்த விற்பன்னன்! – ஏரெடுத்து இங்குளுதான் எம்மனத்தைத் தங்கத் தமிழாலே! பொங்கட்டும் இன்பப் பொழில்! போர்முனைக்குக் கத்திகொண்டு போனவரும் தோற்றிடுவார் ஏர்முனைக்(கு) ஈடான என்றுமவன்! – கூர்விழிமுன் யார்வந்து நின்றாலும் யானை வலிமையென பாரதிக்கே கிட்டும் பரிசு! பொல்லாத சாதிவெறி போனதெங்கே என்றறியார் எல்லாமும் எம்மறவன் பாட்டின்முன்! – நில்லாதே ஓடியதாம்! என்றுமவர் ஒப்பற்ற பாடலினால் தேடியிங்குத் தந்திட்டார் தேன்! அச்சமின்றி நாம்வாழ Read more
வல்ல துணையென வண்டமிழைக் கொண்டவர்க்கே இல்லை ஒருபோதும் இன்னலிங்கே!- தொல்லைதரும் வெள்ளைய ரின்மொழி வேண்டாதார் என்றிருந்தால் உள்ளத்திற் கஃதே உயர்வு! தன்னையே தான்போற்றும் தற்பெருமை கொண்டவர்க்கே என்றுமிந்தப் பூமியிலே இல்லையிடம்! – நன்கறிவீர் கள்ள மிலாத கனிவான நெஞ்சமுண்டேல் உள்ளத்திற் கஃதே உயர்வு! குற்றம் இழைப்போர் குணங்கண்டு யாமாற்றும் நற்கருமம் நாட்டிற்கே நன்மைதரும்! – கற்றவர்கள் தெள்ளுதமிழ்ப் பாட்டாலே தேடிநல் வாழ்வளித்தால் உள்ளத்திற் கஃதே உயர்வு! எண்ணம் இனித்திட இன்னிசையை Read more
1. கவியால் கோட்டையைக் கட்டிய கம்பனின் கால்களைத் தொட்டுத் தொழுகின்றேன்! புவியும் செழித்திடப் பூந்தமிழ்த் தோப்பைத் புலமை தழைக்க உழுகின்றேன்! 2. விருத்தக் கவிகள் விருந்தென இன்பம் விளைத்திடும் என்றே..நான் உண்டேனே! பொருத்த முடனே கருத்தைப் புனையும் புதுமைத் திறனை..நான் கொண்டேனே! 3. வில்லொளிர் வீரனும் சொல்லொளிர் சீதையும் வெண்மிதிலை வீதியில் நோக்கினேரே! நல்லொளி பாக்கள் நவின்றிடும் என்னுள் நடையொளி காட்டியே தாக்கினரே! 4. என்றும் Read more
குறள் வெண்பா 10 ஊன்றும் ஒருகோல் உதவுமுன் கைதாங்கி ஊன்றும் சுமையில் முதுகு முதுமையின் கூனறிந்து முன்னயரா வூக்கம் பதுமை யிலைநீ பகர் தளர்வெனு மோர்நோய் தனதாக்காப் பாட்டி தளரா வளர்தெங்கு தான் பிறர்கையை நீநோக்கிப் பின்னே புகாது பிறர்மெச்சப் பாடுபடப் பீடு உறவுக ணீத்தாலும் உன்கை உழைப்பில் உறவதாய்க் கொண்டாய் உயர்வு தனிமையோ சுட்டாலும் தாங்கும் சுமையின் இனிமையாய்க் கொண்டாய் உலகு தோற்றும் முதுமையின் தோற்ற மொருகாட்சி Read more