அளவிலா அருளாளன் ஒருபா ஒருபஃது

காப்பு பார்வைக்கு மெட்டாப் பரம்பொருளே நின்னருளால் சோர்வுகள் நீங்கிச் சுகம்பெறவே – தீர்க்கமாய் உன்னருளை வெண்பாவாய் உன்னதமாய்த் தீட்டிட உன்னருளை வேண்டுகி றேன்! நூல் அண்டம் முழுதும் அழகாய்ப் படைத்ததில் வண்ணங்கள் தீட்டிடும் வல்லோனே – திண்ணமாய் நுண்ணறிவில் நீபடைத்தாய் நுட்பமாய் உன்னருள் வெண்மேகம் போன்றது வே. (1) வேண்டுமே வேண்டாவே வேண்டுதல் யாவையும் ஆண்டோன் உனக்கே அதிகாரம் – வேண்டினால் நீண்டிடும் நின்றிடா நின்னருள் வேண்டலால் கேண்மையும் தந்திடுவாய் Read more