நேரிசை வெண்பா வகை

வண்டமிழ்ப் பாவெடுத்து வாழ்த்திடு பெண்மையை
வண்ணமாய்ப் பாக்களில் வாகெனத் – திண்ணமாய்
எண்டிசை கேட்டிட ஏத்திய வண்ணமே
விண்ணுலகம் போற்றும் வியந்து

வண்ணமாம் வாழ்வும் வறுமையில் நண்ணினும்
வண்ணமா யச்சிறு வர்பசி -எண்ணியே
விண்ணு மவருண வீந்துண வேண்டுவாளை
விண்ணுலகம் போற்றும் வியந்து

எண்ணுக பெண்மையை ஏற்றமோடு எங்கணும்
எண்ணியே நண்ணுக ஏந்திழை – எண்ணமே
விண்ணதி லேயொளிர் வெண்ணிலா போலென
விண்ணுலகம் போற்றும் வியந்து

மண்ணிலே மாதென மாண்புறு மன்னையை
கண்ணிலே காணுமோர் காயமாய்க் – காண்பதோ?
விண்ணுறை தெய்வமாய் வேண்டிட வுன்னையே
விண்ணுலகம் போற்றும் வியந்து

விண்ணிலா விஞ்சிடும் வண்ணமாம் பெண்மையை
வண்ணமாய் வாழ்வினில் வேண்டியே – கண்ணதாய்
ஒண்ணியே வாழ்வதில் உண்ணிடு அண்ணலை
விண்ணுலகம் போற்றும் வியந்து

 

Categories: வெண்பா

1 Comment

புனிதா கணேசன் · நவம்பர் 16, 2016 at 22 h 27 min

மண்ணிலே மாதென மாண்புறு மன்னையை
கண்ணிலே காணுமோர் காயமாய்க் – காண்பதோ?
விண்ணுறை தெய்வமாய் வேண்டிட வுன்னையே
விண்ணுலகம் போற்றும் வியந்து –
என்ற பாவில் இரண்டாம் அடியை –
‘கண்ணிலே காணுமோர் கடவுளாய்க் – கண்டிடு’ என்று மாற்றுக.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

மரபுக் கவிதை

தம்பி… 9

வாழ்வாயே மகிழ்வாக வாழ்த்திடவே பெரியோர்கள் தாழ்வென்ற நிலையில்லை தளராமல் உழைத்திட்டால் ஏழ்மையென்னும் நிலையில்லை ஏற்றத்தைப் பெறுவாயே வீழ்வதெல்லாம் எழுவதற்கே வீறுகொண்டு எழுவாயே.

மரபுக் கவிதை

தம்பி… 8

ஏரோட்டம் இல்லையென்றால் ஏற்றமில்லை செல்வத்தில் தேரோட்டம் ஓடாது தெம்மாங்கும் கேட்காது காரோட்ட வாய்ப்பில்லை கஞ்சிக்கும் ஏமாற்றம் நீரோட்டம் காத்திட்டால் நிச்சயமாய் நன்மையுண்டே.