வெண்பா
பாரதிக்குப் புகழ்மாலை
(கட்டளைக் கலித்துறை) பாக்கள் படைத்த ஆயிர மாயிரம் அருங்கவியே பாயிரம் பாட துணிந்தேன் உனக்கென பாரதியே மாயமோ என்னவோ உன்கவி கேட்கின் மயங்குகிறேன் பாயுதே தேனெனப் பாக்கள் செவியுளே பாப்பொழிலே! (1) பாவலன் என்றுனைப் பாமர மக்களின் பார்வியக்கத் தேமது ரம்போல் புனைந்தாய் கவிகளைச் சீருடனே நாமெலாம் கூடியே நாட்டி (ன்) அடிமை நலிவகற்றக் கோமக! வீரம் நீயெம் குருதியில் குழைத்தனையே! Read more
