கவிதை

தொடமுடியா சரித்திரமே…

அகரத்திற்கோர் பெருமை
நின் பெயரின் முதலெழுத்தை
முதல் எழுத்தாய்க் கொண்டதால்!

ஆக்கத்தின் திறவுகோல்
நின்னணுக் கரங்களிலும்
மழலைப் புன்னகையிலும்!

இந்திய தேசம் கண்டெடுத்த
விஞ்ஞானப் புதையல் நீங்கள்!

 » Read more about: தொடமுடியா சரித்திரமே…  »

கவிதை

வரம் வேண்டும் தேவதையே…

ஏற்றம் தரும் வாழ்வில்
மாற்றம் தர வந்தவளே
மாற்றங்களை தந்து விட்டு
ஏமாற்றமும் தந்தது ஏன்?

நீ காற்றில் எனக்காக
தூது விட்ட முத்தமெல்லாம்
என் காதில் இடியின் சத்தமாய்
வந்து விழுவதேன்?

 » Read more about: வரம் வேண்டும் தேவதையே…  »

கவிதை

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
தங்கமாக மின்னும் துள்ளி
தேனறிவு தரும் அள்ளி.
நாவில் சுவைகூட்டும் நெல்லி.

எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
அறிவுப் பால் கொடுக்கும் அம்மா
விரல் பிடித்து அழைத்திடும் அப்பா
தோளோடு தோள் உரசும் நண்பன்.

 » Read more about: எங்க ஊர் ஆரம்பப் பள்ளி  »

கதை

நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்

தன் முன் கவலையுடன் நின்ற இளைஞனைப் பார்த்தார் குரு. “என்ன பிரச்னை? எதற்கு கவலை?” என்றார் குரு. “எனக்கு எந்த வியாபாரமும் சரிவர மாட்டேன்கிறது. எல்லோரும் என்னை எதிரியாகவே பார்க்கிறார்கள். யாரும் சரியாகப் பழக மாட்டேன்கிறார்கள்.

 » Read more about: நீ எப்படியோ அப்படித்தான் மற்றவர்களும்  »

By Admin, ago
கவிதை

முதுமையில் உழைப்பு

குறள் வெண்பா 10

 

ஊன்றும் ஒருகோல் உதவுமுன் கைதாங்கி
ஊன்றும் சுமையில் முதுகு

முதுமையின் கூனறிந்து முன்னயரா வூக்கம்
பதுமை யிலைநீ பகர்

தளர்வெனு மோர்நோய் தனதாக்காப் பாட்டி
தளரா வளர்தெங்கு தான்

பிறர்கையை நீநோக்கிப் பின்னே புகாது
பிறர்மெச்சப் பாடுபடப் பீடு

உறவுக ணீத்தாலும் உன்கை உழைப்பில்
உறவதாய்க் கொண்டாய் உயர்வு

தனிமையோ சுட்டாலும் தாங்கும் சுமையின்
இனிமையாய்க் கொண்டாய் உலகு

தோற்றும் முதுமையின் தோற்ற மொருகாட்சி
தோற்சுருக் காயதுவே தோன்று

தன்மானம் கைக்கொள்ளத் தாரணியில் ஏற்றமது
என்னும் முதுமை எழில்

சுடுவெயிலும் தண்மதியும் சேர்த்தொன் றதேகண்
டிடுமுதுமை தான்தளரா தின்று

அச்சமின்றி வாழ்வை அனுபவமா யேந்திவி(டு)
இச்சகத்தில் என்றாய் உணர்ந்து

 » Read more about: முதுமையில் உழைப்பு  »

புதுக் கவிதை

தனியாய்!

என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவாய் நீ இல்லாமல்..! என் இதயப் படகு
தவிக்கிறது தனிமையில்
துடுப்பாய் நீ இல்லாமல்! என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலராய் நீ இல்லாமல்..!  » Read more about: தனியாய்!  »

கவிதை

கனவு நாயகன் அப்துல்கலாம்!

தூக்கத்தில் வருவதல்ல கனவு – உன்னைத்
தூங்காமல் செய்வதுதான் கனவாம் – என்றே
ஊக்கத்தை நமக்கெல்லாம் தந்தவர் – இந்த
உலகறியத் தலைமகனாய் வந்தவர்!

இளைஞர்க ளின்எழுச்சி நாயகர் –

 » Read more about: கனவு நாயகன் அப்துல்கலாம்!  »

கவிதை

தீக்குள் விரலை வைத்தால்

தீக்குள் விரலை வைத்தால்

மனிதா…
நீ பேராசையெனும்
தீக்குள் விரலை வைத்தால்…
உன் மனம் நொந்துபோகும்…
உன் விரல் வெந்துபோகும்!

மனிதா…
நீ காமவெறியெனும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் மிருகமாகிடும்…

 » Read more about: தீக்குள் விரலை வைத்தால்  »

கவிதை

பள்ளிக்கூடம்

கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம்.

கரும்பலகையில் கிறுக்கிய கையுடன்,

கண்சிமிட்டி பேசிய எழுத்து !

வாத்யாரின் பிறம்பை பார்த்து

பின்னுக்கு தள்ளி பயந்த காலு,

 » Read more about: பள்ளிக்கூடம்  »

கட்டுரை

என்ன உலகம்? என்ன மனிதர்கள்?

என்ன உலகம்? என்ன மனிதர்கள்? அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது.

நல்லாதானே இருந்தார்? இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள்,

 » Read more about: என்ன உலகம்? என்ன மனிதர்கள்?  »