என்ன உலகம்? என்ன மனிதர்கள்? அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது.

நல்லாதானே இருந்தார்? இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள், தங்களின் மரணத்தை நினைத்து பார்ப்பதில்லை.

இஸ்லாம் வலியுறுத்தும் ஹலால் – ஹராம் அதாவது நேர்மையான – நேர்மையற்ற உழைப்பும் அதன் வருமானமும் தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையின் அளவீடாக உள்ளது.

தானாக உழைக்காமல் பிறரை ஏமாற்றி வாழ நினைப்பவனை மனித தோற்றம் கொண்ட மிருகம் என்றே கருதலாம்.

மிருகங்களுக்குள் கூட சில நேரத்தில் இன புரிதல் இருக்கலாம்? ஆனால் இந்த கேடு கெட்ட மனிதருக்குள் மட்டும் இன புரிதல் இல்லாமல் போனது ஏன் என்பதே எனக்கான கேள்வி?

தன்னை போல் தானே மற்றவரும் என்ற சிந்தனை இல்லாததால் தான், ஒவ்வொரு நாளும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சொத்து அபகரிப்பு,ஏல சீட்டு மோசடி, கொடுக்கல் வாங்கல் மோசடி,நம்பிக்கை துரோகம்,நன்றி மறத்தல், என பக்கம் பக்கமாய் ஊடகங்களில் செய்தி வரிந்து கட்டி நிற்கிறது.

பல தலைமுறை மரணித்து மண்ணுக்குள் புதையுண்டும் கூட இந்த கேடுகெட்ட ஈனச்செயல்கள் மட்டும் நிற்கவில்லையே?

கோடி, கோடியாய் சொத்து சேர்ததவனும் மாண்டு தான் போகிறான். கால் வயிற்று கஞ்சிக்காக தன் உயிரையே பணயம் வைத்து நேர்மையாய் உழைப்பவனும் மறைந்து தான் போகிறான்.

மரணத்துக்கு பின்னரும் ஒருவனை இந்த சமூகம் அயோக்கியன் என்று சொல்லுமேயானால்… அவனை மனித உருவில் வாழ்ந்து மறைந்த மிருகம் என்று சொல்லலாம்.

மரணத்துக்கு பின்னரும் ஒருவனை நல்லவன் என்று இந்த சமூகம் சொல்லுமேயானால்… மனிதனாக பிறந்து மனிதனாக வாழ்ந்து மனிதனாகவே மறைந்து போன மாமனிதன் என்று நாம் சொல்லலாம்.

தனக்கு எது நன்மை தரும் என்று ஒருவன் நினைக்கிறானோ? அதையே தனது சக மனிதருக்கும் அவன் நினைக்கட்டும் என்று முகம்மது நபி(ஸல்) அவர்கள் அழகிய முறையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து விட்டு எஞ்சியிருக்கும் வாழ் நாளையாவது நல்லோர்களாய் வாழ முயற்சி செய்வோம். இறைவன் அதற்கு அருள் புரியட்டும்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »