தீக்குள் விரலை வைத்தால்

மனிதா…
நீ பேராசையெனும்
தீக்குள் விரலை வைத்தால்…
உன் மனம் நொந்துபோகும்…
உன் விரல் வெந்துபோகும்!

மனிதா…
நீ காமவெறியெனும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் மிருகமாகிடும்…
உன் விரல்
நரகமாகிடும்!

மனிதா…
நீ மூடநம்பிக்கையெனும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் மடங்கிப்போகும்…
உன் கரம் முடங்கிப்போகும்!

மனிதா…
நீ தீவிரமதவெறியென்னும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் மதம் பிடித்தாடும்…
உன் கரம் நித்தம் தள்ளாடும்!

மனிதா…
நீ சாதிப்பிடிப்பெனும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் சோதனையில் நிற்கும்…
உன் கரம் சாதிக்கத் தயங்கும்!

மனிதா…
தீக்குள் விரலை வைத்தால்…சுடாது..
உன் விரலோடு…
உன் கரமும் மாண்டுபோகும்..இது வேண்டுகோளல்ல..
எச்சரிக்கை!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.