கால் வைத்து பழகி ஓட்டம் பிடித்த சிறுபயணம்.

கரும்பலகையில் கிறுக்கிய கையுடன்,

கண்சிமிட்டி பேசிய எழுத்து !

வாத்யாரின் பிறம்பை பார்த்து

பின்னுக்கு தள்ளி பயந்த காலு,

உயரம் கூடகூட அளவெடுத்து

தச்ச சட்டைபோல,

படிக்க படிக்க பாடங்களும்

அறிவை ஒசத்த,

வானை நோக்கி பறப்பதே,

பள்ளிகூட வாழ்க்கை !

பணிவாய் பவ்யமாய்

இன்பமாய் அமர்ந்த கூடம் !

 

இந்த,

தேனீக்களாய் மொய்த்த கூட்டத்தில்,

சுவையோடு கூடிய நட்பு.

மனங்களில் மகிழ்ச்சி

வண்டுகளாய் மொய்க்க…

 

கிளைகளில் அமர்ந்த

மழைத்துளி நீரை

குலுக்கிய குலுங்களின் வாசம்.

 

வாழ்க்கை எங்கே போகிறதென்று

தெரியாமலே,

துள்ளலுடன் நடந்து

சென்று வந்த பள்ளிகூடம் !

 

தயங்கிடும்  மூளைக்கும்

சொல்லிக் கொடுக்குமே இந்த

அறிவுக்கூடம்!


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.