மரபுக் கவிதை

இரயிலிருக்கை விடுதூது

காப்பு

கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற
என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள்
நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன்
ஊன்செய்தான் காக்க உவந்து !

புதுமை

செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் !

 » Read more about: இரயிலிருக்கை விடுதூது  »

ஹைக்கூ

சிறுவரிக் கவிதைகள்

மண்ணில் புதைந்தாலும்
விண்ணோக்கி எழுவோம்
விதைகள்!

மறு பிறப்பெடுத்த மகிழ்ச்சி,
எழுத்தாளன் முகத்தில்!
புத்தக வெளியீடு!

மூச்சைவிற்று
வாழ்க்கை நடத்துகிறான்
பலூன்காரன்!

 » Read more about: சிறுவரிக் கவிதைகள்  »

மரபுக் கவிதை

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?

கண்ணீரின் கதை கேட்க வந்தாயா? – காதல்
கடலுக்குள் விழுந்தேனே அறிவாயா?
பெண்ணாக பிறந்தது பெரும் பாவமா? – பேதை
பிணமாகி போனேனே உன் சாபமா?

தவம் இருந்தே பசிதான் மறந்தேனே –

 » Read more about: கண்ணீரின் கதை கேட்க வந்தாயா?  »

புதுக் கவிதை

உருவமான உயிர்

பருவ மழையில்
என் பரம்பரை
துளிர்க்கிறதா…

பருவம்
கொப்பு மாற,
பெண்மை
பூரணம் உணர்கிறது…

இனி,
இனிமை மட்டுமே
இவள் உலகில்…

 » Read more about: உருவமான உயிர்  »

மரபுக் கவிதை

தமிழில் உறைந்து போதல்

பித்தனாய் ஆனேன் பூந்தமிழே – நெறி
பிறழாத கவிதைதா பொற்சிமிழே -– உன்னில்
மொத்தமாய் ஆவி உடல்
மோகனமாய்த் தந்த பின்னே
படித்தேன் – கவி – வடித்தேன்

நற்றிணையில் தமிழ் மணக்கும் பாராய் – காதல்
நர்த்தனங்கள் நிலை கொள்ளும் வேராய் – கை
பெற்றணையா தீபமென
பேரொளியைச் சிந்துகின்ற
நூலைப் – படி – காலை

திருக்குறளின் ஞானப்பால் குடித்தேன் – ஒரு
தினந் தவறா அதிகாரம் முடித்தேன் – முகில்
கருக்காக ஆன மனம்
கதிரவனாய் ஆகித்தினங்
கோர்க்கும் – ஒளி –

 » Read more about: தமிழில் உறைந்து போதல்  »

மரபுக் கவிதை

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும்

வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும் – எங்கள்
வாழ் நாளைச் சிறப்பாக்கிப் பலமூட்டும்
தேசத்தின் பேரோங்க வழி காட்டும் – நிதம்
தெவிட்டாத தெள்ளமுதாய்ச் சுவை மீட்டும்
நேசிப்பே உள்ளத்தை நேராக்கும் – நூல்
நெடுங்காலப் பேதமையைச் சீராக்கும்
போசிக்கும் வாண்மையிலே ஆளாக்கும் – எம்
பொடுபோக்குக் கயமைகளைத் தூளாக்கும்

கருவறைக்குட் தங்குகின்ற காலந்தொட்டே – தாய்க்
கட்டாயம் நன்னூற்கள் கற்றல் வேண்டும்
பெருமளவி லறிவுடைமைப் பெருக்கெடுக்க – எம்
பெற்றோர்கள் வாசிப்பில் நிற்றல் வேண்டும்
குரு குலத்துக் கல்வி முறைத் தோற்றந் தன்னில் – முதற்
குரு நாதர் கரு தாங்குந் தாயே யன்றோ !

 » Read more about: வாசிப்பே அறிவுக்கு வலுவூட்டும்  »

புதுக் கவிதை

அன்புத் தோழி

நிறத்தைப் போலவே
மனமும் வெள்ளை என்றவளே! – அதில்
கரும்புள்ளியை வைத்துவிட்டு
எங்கே சென்றாய்?

தேனினும் இனிமை
குரல் என்றவளே!
அதைக் கசப்பாக்கிவிட்டு
எங்கே சென்றாய்?

 » Read more about: அன்புத் தோழி  »

மரபுக் கவிதை

அவளென் அதிகாரம்

(கலிவெண்பா)

சூல்கொண்ட வெங்கதிரோன் சுட்டெரிக்க நாற்புறமும்
கால்பதிக்கத் தோன்றாக் கலன்போலே துன்புறுத்தப்
பால்முகமோ வாடிடுமே பாவையவள் நாணத்தால்
மால்மருகன் தாள்போல் மனம்குளிரும் சோலையிலே
எல்லையிலா எண்ணங்கள் ஏடெடுத்துப் பாட்டெழுத
ஓரா யிரமாகி ஓயாதக் கற்பனைகள்
நேரே எழுந்தெழுந்து நெஞ்சத்தைப் பற்றிநின்
றொன்றைவொன்றும் முன்நிற்க ஒன்றும் புரியாமல்
நின்றுவிட்டேன்;

 » Read more about: அவளென் அதிகாரம்  »

மரபுக் கவிதை

ஏழ்மையின் எதிர்பார்ப்பு

குரல்: பாத்திமா பர்சானா

வாழ்க்கையிலே அமர்தற்குச் சிறிய வீடு
—— வயிறெரிக்கும் பசிதணிக்கக் கொஞ்சம் சோறு
தாழ்ந்திடாமல் மானத்தைக் காப்ப தற்குத்
—— தகுவுடலை மறைப்பதற்குக் கீழ்மேல் ஆடை
வீழ்ந்திடாமல் தலைநிமிர்ந்து நிற்ப தற்கு
——

 » Read more about: ஏழ்மையின் எதிர்பார்ப்பு  »

நூல்கள் அறிமுகம்

பாலமுனை பாறூக் குறும்பாக்கள்

ஈழத்தமிழ்க் கவிஞர்களுள் சுட்டிச் சொல்லத்தக்க படைப்பாக்கத் திறனாளராக அறியப்பெறுபவர் பாலமுனை பாறுக். கவிதைத்துறையில் நாற்பதாண்டுக் கால அனுபவ முதிர்ச்சியும் அரிய பயிற்சியும் உடைய பாறுக் அண்மைக்காலத்தில் திறனாய்வாளர்களால் அதிகம் பேசப்படக்கூடிய படைப்பாளர்களுள் ஒருவராக ஆகியுள்ளார்.

 » Read more about: பாலமுனை பாறூக் குறும்பாக்கள்  »

By Admin, ago