கவிதை
உனக்கான கரை
உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.
உனக்காகக்
காத்திருக்கும் கணங்கள்
வீணாகிவிடக் கூடாது
என்பதற்காக
உனக்கான கவிதைகளை
எழுதிக் கொண்டே இருக்கிறேன்.
எதைக் கண்டாலும்
கிடைக்கிறது
உனக்கான கவிதை.
நீலவானில் நீந்துகின்ற நிலவே நிலவே – என்
நித்திரையைக் களைத்ததென்ன நிலவே நிலவே!
நீலமலர் ஆடைகட்டி வந்தாய் நிலவே – என்
நெஞ்சத்தில் மகிழ்ந்தாட வருவாய் நிலவே!
தனிமையிலே தவழ்கின்ற தங்க நிலவே –
» Read more about: வருவாய் நிலவே! »
இறை வணக்கம் !
தங்கத் தமிழை அளித்திட்ட
தமிழின் தலைவா முதல்வணக்கம் !
எங்கும் மணந்து கமழ்கின்ற
எழிலே தமிழே என்வணக்கம் !
சங்கம் வைத்துத் தமிழ்வளர்க்கும்
சான்றோர் தமக்கும் தலைவருக்கும்
அங்கம் சிலிர்க்க தமிழ்கேட்கும்
அவைக்கும் என்றன் நல்வணக்கம் !
அகரத்திற்கோர் பெருமை
நின் பெயரின் முதலெழுத்தை
முதல் எழுத்தாய்க் கொண்டதால்!
ஆக்கத்தின் திறவுகோல்
நின்னணுக் கரங்களிலும்
மழலைப் புன்னகையிலும்!
இந்திய தேசம் கண்டெடுத்த
விஞ்ஞானப் புதையல் நீங்கள்!
ஏற்றம் தரும் வாழ்வில்
மாற்றம் தர வந்தவளே
மாற்றங்களை தந்து விட்டு
ஏமாற்றமும் தந்தது ஏன்?
நீ காற்றில் எனக்காக
தூது விட்ட முத்தமெல்லாம்
என் காதில் இடியின் சத்தமாய்
வந்து விழுவதேன்?
எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
தங்கமாக மின்னும் துள்ளி
தேனறிவு தரும் அள்ளி.
நாவில் சுவைகூட்டும் நெல்லி.
எங்க ஊர் ஆரம்பப் பள்ளி
அறிவுப் பால் கொடுக்கும் அம்மா
விரல் பிடித்து அழைத்திடும் அப்பா
தோளோடு தோள் உரசும் நண்பன்.
குறள் வெண்பா 10
ஊன்றும் ஒருகோல் உதவுமுன் கைதாங்கி
ஊன்றும் சுமையில் முதுகு
முதுமையின் கூனறிந்து முன்னயரா வூக்கம்
பதுமை யிலைநீ பகர்
தளர்வெனு மோர்நோய் தனதாக்காப் பாட்டி
தளரா வளர்தெங்கு தான்
பிறர்கையை நீநோக்கிப் பின்னே புகாது
பிறர்மெச்சப் பாடுபடப் பீடு
உறவுக ணீத்தாலும் உன்கை உழைப்பில்
உறவதாய்க் கொண்டாய் உயர்வு
தனிமையோ சுட்டாலும் தாங்கும் சுமையின்
இனிமையாய்க் கொண்டாய் உலகு
தோற்றும் முதுமையின் தோற்ற மொருகாட்சி
தோற்சுருக் காயதுவே தோன்று
தன்மானம் கைக்கொள்ளத் தாரணியில் ஏற்றமது
என்னும் முதுமை எழில்
சுடுவெயிலும் தண்மதியும் சேர்த்தொன் றதேகண்
டிடுமுதுமை தான்தளரா தின்று
அச்சமின்றி வாழ்வை அனுபவமா யேந்திவி(டு)
இச்சகத்தில் என்றாய் உணர்ந்து
என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவாய் நீ இல்லாமல்..!
என் இதயப் படகு
தவிக்கிறது தனிமையில்
துடுப்பாய் நீ இல்லாமல்!
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலராய் நீ இல்லாமல்..! » Read more about: தனியாய்! »
தூக்கத்தில் வருவதல்ல கனவு – உன்னைத்
தூங்காமல் செய்வதுதான் கனவாம் – என்றே
ஊக்கத்தை நமக்கெல்லாம் தந்தவர் – இந்த
உலகறியத் தலைமகனாய் வந்தவர்!
இளைஞர்க ளின்எழுச்சி நாயகர் –
» Read more about: கனவு நாயகன் அப்துல்கலாம்! »
தீக்குள் விரலை வைத்தால்
மனிதா…
நீ பேராசையெனும்
தீக்குள் விரலை வைத்தால்…
உன் மனம் நொந்துபோகும்…
உன் விரல் வெந்துபோகும்!
மனிதா…
நீ காமவெறியெனும்
தீக்குள் விரலை வைத்தால்
உன் மனம் மிருகமாகிடும்…