கவிதை

நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி

n.mபாட்டொன்று எழுதுவதற்கு அமர்ந்து விட்டால்
பசிதூக்கம் அத்தனையும் மறந்தே போய்
மெட்டினையே நினைவினிலே அசை போட்டு
மெல்லிசையை அதனிலே கரைவ தற்கே
இட்டமுடன் பாட்டெழுதி தந்து விட்டு
இமைமூடாமல் இருந்தது எத்தனை நாளோ ?

 » Read more about: நா.முத்துக்குமார் பாடலாசிரியருக்கு கவிதாஞ்சலி  »

கவிதை

உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!

காந்தியெனும் உத்தமரால் சுதந்திரத்தைக் கண்டோம்!
….. காவிவண்ணத் தியாகத்தை அவருருவில் கண்டோம்!
சாந்தியெனும் சத்தியத்தின் சீலராகக் கண்டோம்!
….. சரித்திரத்தில் வெள்ளைவண்ணத் தவஒளியைக் கண்டோம்!
காந்தியத்தின் மகிமையெல்லாம் கற்பதிலே கண்டோம்!

 » Read more about: உன்னதமாம் சுதந்திரத்தை உயிராகக் காப்போம்!  »

கட்டுரை

வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்!

cow_PNG2135பாதம் தொட்டு பணிகிறேன்… படியுங்கள்.

பசுவாகிய எனக்கு, புணர்வதற்கு என் வீரக் காளை தேவை!…

உம்பளச்சேரி வகையைச் சேர்ந்த பசுவாகிய நான் ஆச்சாம்பட்டியில் உள்ள செம்மைவனத்தில் வாழ்கிறேன்.

 » Read more about: வாயில்லா ஜீவன் பசு பேசுகிறேன்!  »

By Admin, ago
கட்டுரை

இல்லற தர்மம்

கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது.

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.

 » Read more about: இல்லற தர்மம்  »

By Admin, ago
கட்டுரை

முக்கோண முக்குளிப்பு

“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம்.

 » Read more about: முக்கோண முக்குளிப்பு  »

கதை

உனக்கென இருப்பேன்…

3 நிமிட சிறுகதை

“ஹாய்டா ராஜேஷ்..”

“ஹாய் உமா.. என்ன சர்ப்ரைஸ் காலிங்..”

“என்னமோ தெரியலடா.. இன்னிக்கி காலையிலேயிருந்தே ஒன்னோட நெனப்புதான்.. அஞ்சி வருஷத்துக்கு முன்னால இந்த தேதியிலதான் நாம மொதமொதலா சந்திச்ச நாளுங்குறதாலகூட இருக்கலாம்..”

“ஓ..

 » Read more about: உனக்கென இருப்பேன்…  »

கவிதை

மௌனம்

மௌனமே மொழியானது
உனக்கும் எனக்கும்
மந்திர விழி பேசுது
மயக்கம் கிறக்கம்
சுந்தர கவியானது
இதய இயக்கம்
சேர்ந்திட முடியாதது
வாழ்வியல் குழப்பம்
கனவினில் கூத்தாடுது
பேசாத அன்பின் நெருக்கம்
விடிந்ததும் மனம் ஏங்குது
புரியாத வார்த்தையின் விளக்கம்
உறவினில் கலந்தாயே
சிறகுகள் விரிக்க
விறகாக்கி எரிப்பாயோ
இந்த வீணையை உணராமல்
இல்லை
உலகாக்கி கேட்டு மகிழ்வாயோ
இந்த ஊமையை
சபை ஏற்றி மகிழ்வாயோ

 » Read more about: மௌனம்  »

கவிதை

எழுதத் துடிக்கும் மனசு…!

எழுதத் துடிக்கிறது என் மனசு..
எழுத
காகிதம் காணாமல்
கனக்கிறது மனசு..
மெய்யான ஒன்றை
பேனா மையால் தான் எழுத வேண்டுமா..?
என்
இதயக் காகிதத்தில்
இரத்தத்தால் எழுதி வைத்த
கிறுக்கல்களை
மொழிபெயர்க்கிறேன்..!

 » Read more about: எழுதத் துடிக்கும் மனசு…!  »

கவிதை

நட்பு

அன்புகொண்ட நண்பரோடு
பழகுகின்ற போதினில்
என்புஞ்சதையும் உள்ளதுபோல்
இருவர்நட்பும் அமையுமே.

எந்தநாளில் எந்தநேரம்
என்னதீமை நேரினும்
அந்தநாளில் அந்தநேரம்
அதனைப்போக்க நண்பனே

மின்னல்போல வந்துமுன்னே
இன்பஞ்சேரச் செய்வனே.

 » Read more about: நட்பு  »

கவிதை

​உச்சிக் குளிருதடா!

கட்டி அணைக்கையிலே உச்சிக் குளிருதடா!

விட்டு விலகையிலே நெஞ்சம் கணக்குதடா!

உந்தன் ஸ்பரிசமது உயிரைப் பிழியுதடா!

எந்தன் மனசினிலே இன்பம் வழியுதடா !

உச்சி முகர்ந்தாலே உள்ளம் சிலிர்க்குதடா!

 » Read more about: ​உச்சிக் குளிருதடா!  »