“இது என் நூல் யாரும் இரவல் கேட்காதீர்கள்” காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் கண்ணதாசன் கைப்பட எழுதிய வாசகம்தான் இது. ஒரு பயனுள்ள நல்ல நூலை நாம் யாருக்கும் இரவல் தர மனம் வராது தவிப்போம். அப்படியே தந்தாலும் நினைவுபடுத்தி பெற்றுக் கொள்வோம்.

ஒரு நூலுக்கான மதிப்பை அதை படிக்கும் ஓரிரு பக்கங்களிலேயே தீர்மானித்து விடலாம். மீண்டும் மீண்டும் படிக்க வைக்கும் புத்தங்கள் உலத்தின் தலைச் சிறந்த மதிப்பைப் பெற்றதாகும்.

படிக்க படிக்க சலிப்பு தட்டாக ஒரு நூல் இந்த முக்கோண முக்குளிப்பு. ஒரு நூலுக்கான தகுதியும் அதுதான்.

சுருங்கச் சொல்லல், விளங்க வைத்தல்gowry_sivapalan
நவின்றோர்க்கு இனிமை, நன்மொழி புணர்தல்
ஓசை யுடைமை, ஆழம் உடைத்தாதல்
முறையின் வைப்பே, உலகமலை யாமை
விழுமியது பயத்தல், விளக்கும் உதாரணத்தது
ஆகுதல் நூலிற்கு அழகென்னும் பத்தே

என்று ஒரு நூலிற்கான பத்து அழகுகளைப் பற்றி என் முன்னோடி பவணந்தி எடுத்துரைக்கிறார்.

பத்து பொருத்தமும் பொருந்தி வரும் ஒரு நல்ல புத்தகமே இந்த முக்கோண முக்குளிப்பு.

நன்றாகத் தமிழ் செய்யும் ஞானம் பெற்ற புலம்பெயர்ந்த தமிழச்சியால் (சந்திரகௌரி சிவபாலன்) எழுதப்பட்ட இந்த நூல் பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய களஞ்சியமாகும். தமிழ்ச் சொற்களைப் பொதிந்து வைத்திருக்கும் அம்பராத்தூணி.

இலக்கிய இன்பம்

அறிந்ததும் புரிந்ததும்

சிந்தனையின் தேனூற்று

என்று நூலை மூன்றாகப் பிரித்து பாகுபடுத்தி முக்கோண முக்குளிப்பு என்ற தலைப்பை இந்நூலுக்கு இட்டிருப்பது நூல் பொருத்தமாகும்.

இலக்கிய இன்பம் என்ற பகுதியில் இலக்கயத்தைப் பற்றிய நல்ல புரிதலை நமக்கு கொடுக்கிறார் நூலாசிரியர். இலக்கிய வரிகள் புலவர்களின் அறிவுகள் என இந்தப் பகுதி விரிகிறது. நான் கேளவி படாத இலக்கிய மேற்கோள்கள் இதில் இடம் பெற்றிருக்கிறது. அந்த தகவல்களும் சிறப்பானதாகவே இருக்கிறது.

அறிந்ததும் புரிந்ததும் என்ற தலைப்பில் தமிழர் கலாச்சாரத்தையும் அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தனக்கே உரிதான அழகான மொழி நடையில் எழுதிருப்பது சிறப்பு. திருநீறு, ஆடி அமாவாசை, ஆலமரத்தடி பிள்ளையார், தமிழர் கலாச்சாரத்தில் தாலி, தலைப்பாகை, விளக்கின் ஆன்மீகத் தத்துவம் என்பது போன்ற புதிய கோணத்தில் சொல்பட்டிருக்கும் செய்திகள் அற்புதம்.

சிந்தையின் தேனூற்று என்ற தலைப்பில் சொல்லி இருக்கும் ஒவ்வொரு கருத்துகளும் நடைமுறை இயல்பையும் அதன் வெளிப்பாட்டு நடைத்தையும் நமக்கு சொல்லி தெளிவை கொடுக்கின்றன.

கல்வி, அன்பு, நட்பு, அனுபவம், சீதனம், திருமணம், வன்முறை, முதியோர் தினம், நம்பிக்கை, கோபம் என்பது போன்ற தலைப்புகளில் எழுதிருக்கும் பாங்கு அழகு.

“இது எனக்கான தெளிவு மட்டுமல்ல உலகத்துக்கான தெளிவு” என்று நூலாசிரியர் சந்திரகௌரி சிவபாலன் ‘விதைத்தை விளக்குகின்றேன்’ என்னும் என்னுரையில் சொல்லி இருக்கிறார். உண்மையும் அதுதான். எல்லோரும் வாசித்து தெளிய வேண்டிய நூல் உருவாகும்.
” தன் எண்ணமென்னும் பொக்கிசத்தை பிறர் எண்ணத்திற்குள் புகுத்தும் அற்புதக்கலை கைவரப் பெற்றவர் சந்திர கௌரி” என்று வாழ்த்துரையில் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் கூறும் கூற்று மெய்யானதே.

நூல் அமைப்பு அழகு!

எழுத்தின் வடிவம் வாசிக்க ஆர்வம்!

வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் வடிவமைப்பு!

ஜெர்மன் எழுத்தாளர் சங்கம் வெளியீடாக வந்திருக்கும் இந்நூல் எல்லோர் வீட்டு நூலகத்திலும் இருக்க வேண்டிய பயனுள்ள நூலாகும்.

அன்னை சந்திரகௌரி சிவபாலன் அவர்களுக்கும், ஜெர்மன் எழுத்தாளர் சங்கத்திற்கும் என் நெஞ்சம் கனிந்த வாழ்த்துகள்.

மேலும் பல நூல் படைக்க வேண்டும்.


3 Comments

kowsy · ஆகஸ்ட் 13, 2016 at 10 h 45 min

ஒரு பேராசிரியர் மனம் தொட்டு விரல் வழி வழிந்து வந்த மன வரிகள், என் பேனாவுக்கு நிரம்பி வழியும் மை இட மனம் கொள்கிறது. என் வரிகள் பலர் மனங்களைத் தட்டி எழுப்ப வேண்டும் என்னும் அவாவை தூண்டும் எழுத்துக்களாக இப்பக்கம் வந்து அமர்ந்துள்ளது. கோடு போட்டுக் காட்யுள்ள வரிகள் கோட்டுக்குள்ளே செல்ல அனுமதி தந்ததாக இருக்கின்றன. மிக்க நன்றி பேராசிரியர் சிவராஜா அவர்களே. இவ்விமர்சனத்தைப் பெற்று என் எழுத்தை நேசித்து தன் இணையத்தில் இணைக்கும் தமிழ் நெஞ்சம் அவர்களே உங்களுக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

Dr Ezhilvendan · ஆகஸ்ட் 13, 2016 at 17 h 15 min

‘முக்கோண முக்குளிப்பு’ நூலை தமிழ்நெஞ்சம் அறிமுகம் செய்துள்ளதை மனமுவந்து பாராட்டி மகிழ்கிறேன்.

நூலாசிரியர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களையும் நூலை வெளியிட்டுள்ள ‘ஜெர்மன் எழுத்தாளர் சங்கத்திற்கும் என்று நெஞ்சார்ந்த அன்பின் இனிய நல்வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களைப் பற்றி அண்மையில் அறிந்து கொள்ளும் இனிய வாய்ப்பு கிடைத்தது.

ஆண் பெண் உறவில் பெண்கள் நிலை குறித்து நான் எழுதிய கவிதைக்கு முகப்புத்தகத்தில் நான் வேண்டுகோள் விடுத்துள்ளதை ஏற்று அவர் அனுப்பிய விமர்சனக் கட்டுரை அவரது பன்நோக்கு பார்வைக்கும் உலகளாவிய சிந்தனைக்கும் சான்றாக்கியது.

எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த கருத்துக்கள், சுதந்திரமான சிந்தனை, முற்போக்கு நோக்கு இவை என்னைப் பெரிதும் ஈர்த்தன.

விரைவில் நூலைப் படிக்க ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். தமிழ் இலக்கிய உலகுக்கு நம்பிக்கை தரும் ஒளிரும் நட்சத்திரம் ஒன்றை அடையாளம் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

– கவிவேந்தர் டாக்டர் எழில்வேந்தன், சென்னை

Vetha. Langathilakam. · ஆகஸ்ட் 24, 2016 at 10 h 57 min

மிக மகிழ்வாக உள்ளது இவைகளை வாசிக்க.
தோழி மேலும் புகழடைந்து சிறப்புற வாழ்த்துகள்.
அனைவருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »