கவிதை
பெண்மையின் முகவரியாய்!
வறுமை வாட்டியதால்,
வெறுமையானதே இவள் வாழ்வு.
இருந்தும், முயன்றவளாய்,
பொறுமையே இவளைப் பார்த்து
பொறாமை கொண்டதே!
தனிமை…
துரத்தி துரத்தி,
வேட்டையாட முயன்ற போதெல்லாம்,
வறுமை வாட்டியதால்,
வெறுமையானதே இவள் வாழ்வு.
இருந்தும், முயன்றவளாய்,
பொறுமையே இவளைப் பார்த்து
பொறாமை கொண்டதே!
தனிமை…
துரத்தி துரத்தி,
வேட்டையாட முயன்ற போதெல்லாம்,
( அறுசீர் விருத்தம் வாய்பாடு விளம் மா தேமா )
தந்திடும் வாசம் தன்னை
தண்ணொளித் தாழம் பூ(வு)க்கே
உன்னிடம் கண்ட பாசம்
உணர்ந்தவன் சொல்லு வேனே
பண்னெடுங் காலம் தொட்டே
பண்பெனில் தாய்மை தானே
உன்னடி பணிதல் ஒன்றே
உண்மையில் உவகைத் தேனே!
சுந்தர மருந்து 1
இல்லாளைத் துன்புறுத்தி இன்னொருத்தி கைப்பிடித்துப்
பொல்லா நடைபிணமாய்ப் போகாதீர்.-பல்லோரே !
எள்ளும் தமிழ்ஞாலம் என்றுமிவர் சேர்க்காதாம்,
உள்ளுவீர் கற்பின்றேல் கேடு.
சுந்தர மருந்து 2
இறைகிணறு ஈந்திட்ட ஈடற்ற நீரும்,
» Read more about: மருந்து »
எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…
பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…
நாக்கு நீட்டு மாமான்னு…
» Read more about: வெற்றிலை »
தமிழ் வணக்கம்
கற்கண்டு சொல்லேந்திக் கார்வண்ணன் வில்லேந்திக்
கமழ்கின்ற தமிழே..நீ வாராய்!
காலத்தை வெல்கின்ற கோலத்தை என்பாட்டில்
கணக்கின்றி எந்நாளும் தாராய்!
சொற்கொண்டு வையத்தை நற்றூய்மை நான்செய்யச்
சுடர்கின்ற தமிழே..நீ வாராய்!
வெட்கம் என்பது
எனக்கும் உண்டு தான்..!
என் வயிறு தான்
அதை ஏற்றுக் கொள்ள
மறுக்கிறது..
உலகமும் ஏற்காததை போல்..!
மூக்கைத் துளைக்கும்
வாசனை மிக்க விருந்துகளையா
கேட்கிறேன்..??
எனக்கான கார வெத்தலையில
காம்பு கிள்ளி…
பக்குவமா சுண்ணாம்பு
பாக்கு பரிமாறி…
கொடுத்துபுட்டு நான் மென்னு
தின்னும் வரை காத்திருந்து…
நாக்கு நீட்டு மாமான்னு…
» Read more about: சிவந்த மகள் »
நாவல் பழ நிறத்தழகி
நாயுருவிக் கண்ணழகி-நான்
ஆவல் படும் அழகெல்லாம்
அடங்கி நிற்கும் பேரழகி
சேவல்க்கோழி கொண்டையென
சிவந்திருக்கும் உதட்டழகி-உன்
பாலைப்பழச் சொல்லுக்கு
காளை மனம் ஏங்குதடி!
அஞ்சுகத்தாய் பெற்றெடுத்த
அஞ்சாத நெஞ்சினரே வாழி!
கொஞ்சுதமிழ்ப் பேசி,தமிழ்
நெஞ்சமதை ஈர்த்தவரே வாழி!
முத்துவேலர் பெற்றெடுத்த
முத்தமிழின் பெட்டகமே வாழி!
கத்துகடல் அலையனைத்தும்
கவறிவீச கலைஞரே வாழி!
பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க
பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை
கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக்
கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து
காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில்
கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் ,