பாட்டெழுதும் பாவலன்கை பரிசு வாங்க
பயன்படலாம் பலருக்கும் ; ஆனல் என்கை
கூட்டுக்குள் தவித்திருக்கும் குஞ்சுப் பறவைக்
கோலத்தைப் பார்த்தவுடன் அதனை எடுத்து
காட்டுக்குள் பறக்கவிட்டு கருணை நெஞ்சில்
கூட்டுகின்ற நிகழ்வினையே கடிதாய்ச் செய்யும் ,
வீட்டுக்குள் இருந்தாலும் வெளியே இருப்பினும்
வேலைதேடி என்கைதான் விருப்பம் காணும்

.
நாட்டுக்குள் நடக்கின்ற அநியா யங்கள்
நாமறிந்த வேளையிலே எதிர்த்து எழுதி
தோட்டாபோல் பாவலன்கை துரிதமாய் ; பகையோ
தொகையாக வந்தாலும் பயமே இன்றி
நாட்டமுடன் நியாயமது பக்கம் நின்று
நாட்டுக்கு உழைத்திடுதல் நன்மை பயக்கும் ,
கூட்டமாய்க் கயவர்கள் கூடியே எதிர்த்தால்
குன்றாத வீரமுடன் சாய்க்கும் என்கை
.
அழுவோரின் கண்ணீரைத் துடைத்திட என்றும்
ஆவலுடன் நீளவேண்டும் பாவலர் கைதான் ,
புழுபோல பசியாலே புலம்பித் தவிக்கும்
பொதுமக்கள் எவர்க்கும் பொருளை அளித்து
உழுகின்ற விவசாயி உள்ளம் ஏங்க
ஓடிவந்து உதவுவது பாவலர் கைதான் ,
வழுநீங்கி ஆட்சியிலே வளமை சேர்க்க
வழிகாட்ட வேண்டியதும் பாவலன் கையே !

Related Posts

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »

மரபுக் கவிதை

அன்பு – ஆசிரியப்பா

கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.