விடுபடுதல்

சிலவேளைகளில் கற்பனைகள் உண்மைகளைவிட உன்னதமானவை நான் வகுப்பறைக்குள் நுழைந்தேன் பெஞ்சுகளில் பேசாமல் அமர்ந்திருக்கும் பட்டாம்பூச்சிகள் வணக்கம் சொல்லின கட்டிப்போட்டு பாடம் நடத்தினால் பட்டுப்போய்விடுமென யோசித்தேன் அவற்றின் படபடக்கும் கண்கள் வானுக்கு அழைத்துப் போகச் சொல்லின பறக்கத் தொடங்கினோம் கிறக்கமுற்ற வானம் கைகுலுக்கி வரவேற்றது வானத்தின் வகுப்பில் கணக்குப் பாடம் நட்சத்திரங்களை எண்ணச் சொன்னேன் பறித்துக் கோர்த்து மாலையாக்கி மகிழ்ந்தனர் விடுதலை பற்றிய பாடத்தில் கூண்டுக்குள் வேண்டாமென காற்றிடம் பெருவெளி கேட்டோம் Read more

தீபாவளி

எனது சிறுவயது தீபாவளி எப்படி!!! என்று வரும் என்றே எனை ஏங்க வைக்கும் காலை எழுந்தவுடன் நாட்காட்டி பார்த்து பார்த்து தாள்கள் பழசாய்ப்போகும் என்ன வண்ண உடை எங்கே எடுப்பது கவலை வேறு வந்து ஆட்டும் யாருமே அணியாத புது வகைத்துணியில் நான் மட்டுமே அழகியாக தோன்றவே விருப்பம் கொள்ளும் தீபாவளிக்கு ஐந்துமுறையேனும் கடைக்குச்செல்லவேண்டும் புதிதாக என்ன மாதிரி உடை கண்கள் வட்டமிடும் உனக்கு மட்டுமே இத்தனை நேரம் எடுத்தால் Read more

இயலாமையின் ஓளி

இதோ இந்த பொழுதுதான் உன்னை அழைத்து இசை மீட்ட சொன்னது… நான் பாத்துக்கொண்டே இருக்கும் சமயத்தில்தான் நமக்கான இருளும் இசைந்து வந்தது… வழியெங்கும் விழிபதித்து உன் வருகைக்காய் என்னுடனே காத்திருந்தது இருளும் கைகோர்த்தபடியே… விழிமீன்கள் நீர்வற்றி கருவாடாய் போனபின்பு உன்வருகை அவ்விரவின் சாயலின் தோழனானது… இருளுக்கான அப்பொழுது எனைநோக்கி ஒளிவீச இயலாமையின் கரங்களை இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்….. *மூவருமே பேச்சற்று ஏமாற்றத்தை ஆடையாக்கி விழிநோக்க நாணப்பட்டு தரைமீது ஒளிபதித்தோம்… இருளும் இயலாமையும் Read more

வேண்டும் சுதந்திரம்

மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்! சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்! அணைக்கட்டுப் பிரச்சினையின்றி ஆதரவாக வேண்டும் சுதந்திரம்! வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம் வென்றிட வேண்டும் சுதந்திரம்! கல்வியில் சிறந்து கலைகளில் உயர்ந்திட வேண்டும் சுதந்திம்! கப்பலில் பயணிக்கும் மீனவர்கள் கரைசேர்ந்திட வேண்டும் சுதந்திரம்! ஏழ்மையில்லாத இந்திய நாடாகத் தோன்றிட வேண்டும் சுதந்திரம்! பாலியல் தொல்லையில்லாத பாரதமாக வேண்டும் சுதந்திரம்! சுத்தமுள்ள இந்தியாவின் வாழ்க்கை சுகமாக Read more

பாரியன்பன் கவிதைகள்

விழி கொண்டு மலரும் காதல் மொழி கொண்டு நகரும் கவிதை. மறந்திடாமல் சொல்ல நினைத்த கவிதையொன்று தொலைந்து போனது. இமைகளின் அனுமதியின்றி உறக்கம் தழுவுவதில்லை விழிகளை. கிளையைப் பிரிந்த சருகு சில கணங்கள் நீந்திப் பழகுகிறது காற்றில். வீட்டில் வளர்ப்பு நாய் எச்சிலிலையில் ஏதுமில்லை பாவம் தெருநாய். நிறைவுற்றது பயணம் வழக்கம் போல் வீதியில் விட்டுவிட்டாய் பிரியமின்றி தவிக்கிறேன். இருட்டிலிருக்கிறேன் உற்றுப்பார் நிழலாய் தெரியலாம் நான். சுடறேற்ற பயம் போயிருக்கும். Read more

மனப் பெயர்வு

வாடகை வீட்டில் வாழ்க்கையைக் கடத்தியது போதுமென அடுக்ககத்தின் புது மனையில் நுழையும் ஆயத்தப் பணியில் அனைத்தும் எடுத்து வைத்தாயிற்று ஏதேனும் மறந்துவிட்டோமா என ஒவ்வோர் இடமாய் கண்களால் துழாவும் வேளை வாங்கியதில் இருந்து பூக்காமல் ஏங்கவைத்த அந்தச் சாமந்திப் பூச்செடி அன்றுதான் மொட்டு விட்டிருந்தது

வரம் வேண்டும்

குவளையில் கொஞ்சம் தமிழை ஊற்றுங்கள் – எந்தன்  தாகம் தீரப் பருக வேண்டும் ! அறுசுவை விருந்தெனத் தமிழை அள்ளி – பசிதீர உண்டு நான் திழைக்க வேண்டும் ! செந்தமிழ்க் காற்றே மூச்சுக் காற்றாய் – எந்தன் சுவாசப்பையை நிரப்ப வேண்டும் ! பைந்தமிழ் நூற்று ஆடையை நெய்து – எந்தன் உள்ளம் பூரிக்க அணிய வேண்டும் ! மகுடமாகச் சங்கத்தமிழை சிந்தை மகிழ்ந்து – என் சிரசில் Read more

வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்

நீலவண்ண தாவணியில் நெஞ்சையள்ளும் பேரழகில் கருஞ்சாந்து பொட்டிட்டு கண்பறிக்கும் அழகாலே செந்நிர இதழ்மீது கருந்துளி மச்சத்தில் காளையரை மயக்குகின்ற கச்சிதமான அழகாலே செவ்விதழ் இதழிணைத்து தித்திக்கும் மொழிப்பேசி தேன்சொட்டும் சுவையினில் தேவதையின் அழகாலே வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி என்னருகில் வந்தாளே வான்மகள் நிலவாக ஔிர்ந்தேதான் நின்றாளே உச்சரிக்க வார்த்தையின்றி உதட்டினை கட்டிப்போட்டு ஊர்மெச்சும் அழகோட உருவாகி வந்தாளே பேரழகு யாதென்று அறியாதோர் அறிந்திடத்தான் பிரம்மனோட பிறப்பையும் எஞ்சியே எழில்கொண்டாளே தோகைமயில் அழகினையும் Read more

தடம்புரளும் நாக்கு

எண்சாண் உடம்பு வைத்து, எலும்பு தோல் ஆடை போர்த்தி, வஞ்சத்தை இதயமாக்கி, படைத்தானே இறைவன் அவன். நித்தம் தடம்புரளும் நாக்கினிலே, நரம்பு வைத்தான் எலும்பில்லை, எலும்பைஎண்ணி வைத்து, பிறர் பேச்சுப் பேசினாலே, நொறுங்கிப் போகும் முறைகளை ஏன் படைக்கவில்லை? வரம்புகள் மீறி விட்டோம் – மன வக்கிரங்கள் சேர்த்து விட்டோம், ஆறடி நிலத்திலே; அவனி வாழ்க்கை முடியும் முன், ஆயிரம் பொய்கள், அவசரக் கோலங்கள்.

மொழி பெயர்க்கப்படாத மௌனம்

வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே. அங்கொன்றும் இங்கொன்றுமாக தெறிக்கும் மின்னல்கள் மகிழ்ச்சியை வழங்குவதும் தேடித்தேடி அவற்றைக்காண்பதும் ஒரு சுவை. தோழியர் ரிம்ஸா டீன் எழுதிய ‘‘மொழி பெயர்க்கப்படாத மெளனம்’’ அவ்வகையான இனிய Read more