புதுக் கவிதை
பாரியன்பன் கவிதைகள்
- விழி கொண்டு
மலரும் காதல்
மொழி கொண்டு
நகரும் கவிதை.
- மறந்திடாமல்
சொல்ல நினைத்த
கவிதையொன்று
தொலைந்து போனது.
வாடகை வீட்டில்
வாழ்க்கையைக் கடத்தியது
போதுமென
அடுக்ககத்தின்
புது மனையில் நுழையும்
ஆயத்தப் பணியில்
அனைத்தும் எடுத்து வைத்தாயிற்று
ஏதேனும்
மறந்துவிட்டோமா என
ஒவ்வோர் இடமாய்
கண்களால் துழாவும் வேளை
வாங்கியதில் இருந்து
பூக்காமல்
ஏங்கவைத்த
அந்தச் சாமந்திப் பூச்செடி
அன்றுதான்
மொட்டு விட்டிருந்தது
குவளையில் கொஞ்சம்
தமிழை ஊற்றுங்கள் – எந்தன்
தாகம் தீரப் பருக வேண்டும் !
அறுசுவை விருந்தெனத்
தமிழை அள்ளி – பசிதீர
உண்டு நான் திழைக்க வேண்டும் !
நீலவண்ண தாவணியில்
நெஞ்சையள்ளும் பேரழகில்
கருஞ்சாந்து பொட்டிட்டு
கண்பறிக்கும் அழகாலே
செந்நிர இதழ்மீது
கருந்துளி மச்சத்தில்
காளையரை மயக்குகின்ற
கச்சிதமான அழகாலே
செவ்விதழ் இதழிணைத்து
தித்திக்கும் மொழிப்பேசி
தேன்சொட்டும் சுவையினில்
தேவதையின் அழகாலே
வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி
என்னருகில் வந்தாளே
வான்மகள் நிலவாக
ஔிர்ந்தேதான் நின்றாளே
உச்சரிக்க வார்த்தையின்றி
உதட்டினை கட்டிப்போட்டு
ஊர்மெச்சும் அழகோட
உருவாகி வந்தாளே
பேரழகு யாதென்று
அறியாதோர் அறிந்திடத்தான்
பிரம்மனோட பிறப்பையும்
எஞ்சியே எழில்கொண்டாளே
தோகைமயில் அழகினையும்
மிஞ்சியே வந்தாளே
பஞ்சவர்ண கிளியாக
பிரபஞ்சத்தில் மலர்ந்தாளே
எழில்நிறைப் பேரழகே
என்மனம்நிறை ஓரழகே
உனக்காக நானானேன்
எனக்காக நீயாவாய் ?
எண்சாண் உடம்பு வைத்து,
எலும்பு தோல் ஆடை போர்த்தி,
வஞ்சத்தை இதயமாக்கி,
படைத்தானே இறைவன் அவன்.
நித்தம் தடம்புரளும் நாக்கினிலே,
நரம்பு வைத்தான் எலும்பில்லை,
எலும்பைஎண்ணி வைத்து,
வாசிப்பு என்பது ஓர் இனிய நுகர்வு படைப்பாளிக்கும் படிப்பாளிக்கும் இடையே பரிமாறப்படும் இன்சுவை விருந்து. படைப்பாளி ஒரு சொற் கூட விட்டுவிடலாகாது இப்படி நுகரப்படுவதே இருவர்க்குமான பேரின்ப நிகழ்வு. ஒரு நூலைப் புரட்டும் கையால் அப்படி அடிமுதல் நுனிவரை சுவைக்க கிடைப்பது அரிதே.
» Read more about: மொழி பெயர்க்கப்படாத மௌனம் »
சீற்றமிகு கண்ணகியும்
பொறுமையாய் இருந்தவளே
தூற்றுகின்ற செய்கைகண்டு
துர்க்கையாய் மாறினாளே..
ஆற்றல் மிகு மொழி கூட்டி
போற்றும் வழி மலர்ந்தாளே
மாற்றம் ஒன்று வேண்டுமென
மதுரைக்குள் நுழைந்தாளே..
பேரொளி பிறந்தது
காரிருள் மறைந்தது!
பாரெலாம் தீன் ஒளி
பரவிப் பளிச்சிடப்
பூரணமாகி யோர்
புத்தொளி பிறந்தது!
காரணர் முஹம்மத்
எனுமொரு குழந்தை
ஆமினா வயிற்றில்
அழகாய்ப் பிறந்தது!
மழைக்கால ஓரிரவில்..
உதிர்த்துக் கொண்டிருந்தது
வெண்ணிறப் பூக்களை மேகம்..
உலவும் காலத்தில் உயிர்த்தோழியுடன்
பறிக்கும் உயிரை அவனது வசீகர கண்கள்..
காரணம் தேடும் மனம்
ஊர் சுற்ற..
காலம் கனியுமா
கனவுகள் பலிக்குமா
கவலைகள் கலையுமா
கன்னி மனம் மகிழுமா!!
தண்ணீரில் மீன்
அழுதால் தெரியுமா
கண்ணீரில் போடும்
கோலம் நிலைக்குமா!!