மதுவென்னும் மாயனிடமிருந்து நீங்கி
மகிழ்வோடுவாழ வேண்டும் சுதந்திரம்!
சாதிமத பேதமின்றி ஒற்றுமையோடு
சந்தோசமாகவாழ வேண்டும் சுதந்திரம்!

அணைக்கட்டுப் பிரச்சினையின்றி
ஆதரவாக வேண்டும் சுதந்திரம்!
வெடிகுண்டு பாதிப்பின்றி தீவிரவாதம்
வென்றிட வேண்டும் சுதந்திரம்!

கல்வியில் சிறந்து கலைகளில்
உயர்ந்திட வேண்டும் சுதந்திம்!
கப்பலில் பயணிக்கும் மீனவர்கள்
கரைசேர்ந்திட வேண்டும் சுதந்திரம்!

ஏழ்மையில்லாத இந்திய நாடாகத்
தோன்றிட வேண்டும் சுதந்திரம்!
பாலியல் தொல்லையில்லாத
பாரதமாக வேண்டும் சுதந்திரம்!

சுத்தமுள்ள இந்தியாவின் வாழ்க்கை
சுகமாக வேண்டும் சுதந்திரம்!
வறுமையொழிந்த தேசமாக விரைவில்
வல்லரசாக வேண்டும் சுதந்திரம்!


1 Comment

Neethi Raj · ஆகஸ்ட் 18, 2019 at 17 h 18 min

Nice words Congratulations for your nation loving song.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்