இதோ
இந்த பொழுதுதான்
உன்னை அழைத்து
இசை மீட்ட சொன்னது…

நான் பாத்துக்கொண்டே
இருக்கும் சமயத்தில்தான்
நமக்கான இருளும்
இசைந்து வந்தது…

வழியெங்கும் விழிபதித்து
உன் வருகைக்காய்
என்னுடனே காத்திருந்தது
இருளும் கைகோர்த்தபடியே…

விழிமீன்கள் நீர்வற்றி
கருவாடாய் போனபின்பு
உன்வருகை அவ்விரவின்
சாயலின் தோழனானது…

இருளுக்கான அப்பொழுது
எனைநோக்கி ஒளிவீச
இயலாமையின் கரங்களை
இறுக்கமாய் பிடித்துக்கொண்டேன்…..

*மூவருமே பேச்சற்று
ஏமாற்றத்தை ஆடையாக்கி
விழிநோக்க நாணப்பட்டு
தரைமீது ஒளிபதித்தோம்…

இருளும் இயலாமையும்
மனிதத்தை சுமந்ததினால்
தனிமையிலே யெனைவிட்டு
தயக்கத்துடன் நகர்ந்தது…

யாருமற்ற இப்போது
உனக்கான தேநீரின்
ஆவியோடு அளாவுகிறேன்
என் மரணத்தை வெல்வாயா???!!!


* மூவருமே

  1. நான்
  2. இருள்
  3. இயலாமை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்