மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 8

எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென். சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்... பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது. அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும் கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.

By Admin, ago
கவிதை

சிறுவர் நலன் காப்போம்!

சிறுவர் நலன்கள் காத்திடுவோம்
சிறந்து விளங்கச் செய்திடுவோம்
மலரும் அந்த மொட்டுகளின்
மகிமை அறிந்து  வாழ்த்திடுவோம்!
சிறகை விரித்துப் பறக்கட்டும்
சின்னஞ் சிறிய சிட்டுக்கள்
இடையில் சிறகைச் சிதைக்காமல்
இருந்து காப்போம் நாம்அவரை!

 » Read more about: சிறுவர் நலன் காப்போம்!  »

கவிதை

நாளை நமக்கும் மூப்பு வரும்!

நாளை நமக்கும் மூப்புவரும்
நரைக்கும் இளைக்கும் அசதிவரும்
இளமைத் தோற்றம் மறைந்துவிட
எவர்க்கும் முதுமை வந்துவிடும்

முதுமை யாளர் – மூத்தவர்கள்
முழுதாய் நமக்காய் உழைத்தவர்கள்
இளமை வாழ்வை நமக்கென்றே
அன்று தொலைத்த பெரியவர்கள்

“பழசு”

 » Read more about: நாளை நமக்கும் மூப்பு வரும்!  »

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 7

மின்னல் அடித்தால் அதிர்ச்சி உண்டாவது போல நல்லதொரு ஹைக்கூ படித்தால் நமக்கு ஒரு வித இன்ப அதிர்ச்சி உண்டாக வேண்டும். அவ்வாறு அதிர்ச்சியைத் தருவது அதன் ஈற்றடிதான் என்றால் அது மிகையாகா. அத்தகைய ஈற்றடி ‘போகிறது / வருகிறது / நிற்கிறது’ போன்ற வினைச் சொல்லாக இல்லாமல், ‘வானம் / ஊர்வலம் / ஆடும் மயில் /’ போன்ற ஒரு பெயர்ச்சொல்லாக இருந்தால் மாத்திரமே அது சாத்தியம். ஆதலால்த்தான் ‘‘ஹைக்கூவின் ஈற்றடி ஒரு பெயர்ச்சொல்லாக இருக்க வேண்டும்’’ என்பது முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக இருக்கிறது. இது ஹைக்கூ எழுதும் பலருக்குத் தெரியவில்லை. சும்மா மூன்று வரி எழுதினால் அது ஹைக்கூ என்று நினைத்து எழுதித் தள்ளுகின்றனர். அவற்றில் எந்தவித சுவாரஷ்யமும் இருப்தில்லை. அந்தோ பரிதாபம்!

By Admin, ago
புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்

By Admin, ago
புதுக் கவிதை

வா என்னை ஆரத் தழுவிக் கொள்ள..

கற்றவை ஞாபகமில்லை என்கிறாய் பரவாயில்லை நான் இருக்கிறேன் கண்ணே என்கிறேன்.. இவைகள் மட்டுமா இன்னும் சொல்கிறேன் கேள் என் அன்பு மகளே சில பொழுது தாயாகவும் சில பொழுது தந்தையாகவும் சில பொழுது தோழியாகவும் சில பொழுது தாதியாகவும் உனக்காய் மாறுகிறேன்..

மின்னிதழ்

ஹைக்கூ திண்ணை 5

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

By Admin, ago
பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2

பக்திப்பாடல்

பல்லவி.

தாயுந்தன் வாசல்வரை வரவேண்டுமே!
தாயுந்தன் திருமுகத்தின் அருள்வேண்டுமே..!
காளிதேவி வடிவில் நின்றாய்..!
ஊழிக்காலத் துணையாய் வந்தாய்.!

(தாயுந்தான்….)

சரணம்.

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 2  »

By Admin, ago
பாடல்

மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1

பக்திப்பாடல்

பல்லவி

இன்ப வடிவாகி இசையில் நிறைவாகி
மெய்யின் பொருளாகினாய்..அம்மா…!

கன்னித் தமிழாகி காக்கும் கருமாரி
சக்தி வடிவாகினாய்..அம்மா… !

மண்ணின் மகமாயி மதுரை மீனாட்சி மடியில் எனைத் தாங்குவாய்..அம்மா…

 » Read more about: மருதாம்புலத்தரசி மதுர கீதம் 1  »

By Admin, ago
இலக்கணம்-இலக்கியம்

தமிழ்நெஞ்சம் புகழாரம்

தமிழ்நெஞ்சம் புகழாரம் புத்தகம் பற்றி ஒரு பார்வை...

ஒரு புகழாரத்தைத் தனிப் புத்தமாக பதிக்க வேண்டுமென்றால் அதன் தரம் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும் என்கிறது இந்தத் தொகுப்பு. தித்திப்பே திரண்டு வந்து சொற்களுக்குள் புகுந்து கொண்ட திகட்டாத இனிப்பு.நாவூறும் பாக்களின் நற்கோர்வை காரணம் அதன் சொற்கோவை.

 » Read more about: தமிழ்நெஞ்சம் புகழாரம்  »

By Admin, ago