மின்னிதழ்
ஹைக்கூ திண்ணை 8
எல்லாவற்றையும் சொல்லுவதல்ல சென். சொல்லியதை விட சொல்லாமல் இருப்பதே மிக அதிகமாக இருக்கும். அப்படிப்பட்துதான் இன்றைய நிகழ்வும்... பூ அரும்பாக, மொட்டாக இருக்கும் போது வணங்குவது போலவும், மொட்டு விரிந்து சிரிக்கும் போது மணம் வீசுவதாகவும், கனியாக பழுத்த போது பசியாற்றுவதாகவும் இருக்கிறது. அப்படியானதுதான் இந்த வாழ்க்கை. பூ அமைதியாக பூத்து, காய்ந்து, கனிந்து பசியாற்றுவது போல நாம் எந்தவித «அகாசுகா» வேலையும் காட்டாமல் தனக்கான பணியை மட்டும் செய்வதே சிறப்பாகும் கண்டதை கண்டபடி சொல்லாமல் கண்டபடியெல்லாம் சொல்கின்றனர். ஒப்பனை செய்து சொல்கின்ற பாவகை அல்ல துளிப்பா. கற்பனையை விற்பனை செய்யும் அங்காடித் தெருவல்ல துளிப்பா உலகம்.